Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

இரவு விருந்தில் சினிமா நடிகைகள் செய்யும் கூத்து..! சாட்டை சுழற்றும் பிரபலம்..!

சினிமாவில் படுக்கையறை காட்சிகளில், காதல் முத்தக் காட்சிகளில், நெருக்கமாக நடிப்பதாலோ என்னவோ இந்த நடிகைகளுக்கு கற்பு என்றால் சர்பத் குடிப்பதை போல மிகச் சாதாரணமாக தோன்றுகிறது என்றுதான் பலரும் நினைக்க வேண்டி இருக்கிறது.

ஏனெனில் சினிமாவில் ஒழுக்கம் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் கற்றுத்தரும் இந்த நவநாகரிக மங்கைகள், சினிமா கேமரா முன் வாய் கிழிய பேசும் இவர்கள், தனிப்பட்ட முறையில் இருக்கும் போது அடிக்கும் கொட்டங்களும் கூத்துக்களும் வெளியில் சொல்வதற்கு வெட்கக்கேடாக இருக்கிறது.

சரக்கடிக்காமல் தூங்க முடியாது

குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகைகளுக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இரவில் சரக்கடிக்காமல் இவர்களால் தூங்கவே முடியாது. அதுவும் இரவு நேரங்களில், நட்சத்திர ஓட்டல்களில் நைட் பார்ட்டி வைக்கின்றனர்.

எல்லா சோலிகளையும் முடித்து விட்டு…

சில இளம் நடிகர்களை வரவழைத்து அவர்களுடன் ஜோடி சேர்ந்து நள்ளிரவில் குடித்துவிட்டு, கொண்டாட்டம் போடுவதும், அங்கேயே உல்லாசமாக ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டுக் கொள்வதும், பிறகு படுக்கையறைக்கு சென்று எல்லா சோலிகளையும் முடித்துவிட்டு, வீடுகளுக்கு அதிகாலையில் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இதையெல்லாம் வெளியில் பேசினால் வெட்கக்கேடு என்றுதான், சினிமா துறையின் அந்தரங்கங்களை அறிந்த யாரும் வெளிப்படையாக அதை சொல்வதில்லை.

--Advertisement--

ஆனால் ஒரு கட்டத்தில் இப்படிப்பட்ட ஒரு அசிங்கமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அந்த நடிகைகள், ஊடகங்களில் மிகப்பெரிய உத்தமிகளை போல பேசுவதை பார்க்கும் போது, அவர்களின் உண்மை முகங்களை அறிந்தவர்கள் வீறு கொண்டு எழுந்து அவர்களின் லட்சணங்களை புட்டுப் புட்டு வைக்க துவங்கி விடுகின்றனர். அவர்களது போலியான முகத்திரையை கிழித்தும் விடுகின்றனர்.

கூத்துக்கு அளவே கிடையாது

இரவு விருந்துகளில் சினிமா நடிகைகள் அடிக்கும் கூத்துக்கு அளவே கிடையாது. சினிமா நடிகைகள் பொது ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக் கொள்கிறார்கள். எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் கண்டமேனிக்கு பலருடன் தங்களுடைய பொழுதை போக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

இதனை நான் பகிரங்கமாக கூறுகிறேன். எந்த பயமும் கிடையாது. திரை பிரபலங்கள் ஒழுக்கத்துடன் இருக்கிறார்களா..? என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அவர்களை பின்தொடர கூடிய ரசிகர்கள் இதனால் சீரழிந்து போக மாட்டார்களா..?

தமிழா தமிழா பாண்டியன்

நான் கேட்கிறேன்.. சினிமா நடிகைகள் என்னென்ன கூத்தடிக்கிறார்கள்.. என்னென்ன கேவலங்கள் நடக்கிறது.. என்று எனக்கு தெரியும்.. முடிந்தால் என் மீது வழக்கு போட சொல்லுங்கள்.. என பிரபல சினிமா விமர்சகர்.. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய காட்டமான கருத்தை வெளியிட்டு நடிகைகளின் கலாச்சார சீர்கேட்டுக்கு எதிராக சாட்டை சுழற்றி இருக்கிறார்.

தள்ளாடிய குஷ்பூ

அதில் அவர் மிக முக்கியமாக குறிப்பிட்டு கூறிய விஷயங்கள், நடிகை குஷ்பூ குடிபோதையில் ஹோட்டலில் தள்ளாடிக் கொண்டிருந்த பொழுது அவரை கைத்தாங்கலாக கூட்டி சென்று காரில் ஏற்றிவிட்டவர் நடிகர் அப்பாஸ். இதனை நான் நேரில் பார்த்தவன். என்னுடன் இருந்த சில பத்திரிகையாளரும் இதனை பார்த்தார்கள். இல்லை என்று குஷ்பூவால் மறுக்க முடியுமா..?

சுகாசினி

தமிழ்நாட்டில் கற்பு பற்றி பேசினால் விவகாரம் ஆகிவிடும். குஷ்பூ ஒருமுறை கற்பு பற்றி பேசி சிக்கினார் அதன் பிறகு நடிகை சுகாசினி கற்பு குறித்து பேசி பிரச்சினையை விலைக்கு வாங்கினார்.

திரிஷா

நடிகை திரிஷா தன்னைவிட எட்டு வயது இளையவரான தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்ன காரணம்..? தற்போது கிழக்குக்கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்களில் குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வருகின்றனவே..

தோழிகளுடன் மது போதையில் தள்ளாடும் அவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதே.. இதெல்லாம் இல்லை என்று அவர்களால் மறக்க முடியுமா..? என போட்டு தாக்கி இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

இரவு விருந்தில் சினிமா நடிகைகள் செய்யும் கூத்துகள் குறித்து சாட்டை சுழற்றியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன். அவர் சொன்ன விஷயங்கள், இணையத்தில் அனல் கக்கி வருகின்றன.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top