எனக்கு அந்த தேவை இருக்கு.. யாரு ரெடியா இருக்கீங்க..! வெக்கமே இல்லாமல் ஓப்பனாக பேசிய நடிகை கிரண்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை பூர்வீகமாகக் கொண்டவரான நடிகை கிரண் ரதோட் தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் அறிமுகமாகி 20ஸ் காலகட்டத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

குறிப்பாக இவர் நடிக்கும் படங்களில் கவர்ச்சியை திகட்ட திகட்ட காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

நடிகை கிரண் ரதோட்:

கொழுக்கு மொழுக் லுக்கில் கவர்ச்சி ஆட்டம், ஐட்டம் டான்ஸ், கவர்ச்சியான ரோல் உள்ளிட்டவற்றில் நடித்து அனைவரது கவனத்தையும் வெகு சீக்கிரத்திலே ஈர்த்து முன்னணி நடிகை என்ற நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார்.

இவர் முதன் முதலில் 2002ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார்.

---- Advertisement ----

அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. முதல் படத்திலேயே ஏகோபித்த ரசிகர்களின் வரவேற்பு பெற்றார் .

தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், திருமலை, திமிரு, வசூல், ஜக்குபாய் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே அவருக்கு வயது அதிகமாக புது நடிகைகளின் வரவுகளால் அவரது கவர்ச்சி சலிப்பை ஏற்படுத்த சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனார்.

பின்னர் சில ஆண்டுகள் ஆள் அட்ரஸ் இல்லாமல் எங்கே போனார் என்பது கூட தெரியாமல் போனார் கிரண் ரதோட்.

ஆபாசம் காட்டி பணம் வசூல்:

அதன் பிறகு பல வருடத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க ஆரம்பித்த கிரண் ரதோட் எப்போதும் தனது சமூக வலைத்தளங்களில் படுக்க கவர்ச்சியான ஆபாசமான வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து வந்தார்.

இதனிடையே தனது கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவதற்காகவே தனக்கென ஒரு தனி ஆப்பை உருவாக்கி அதில் ரசிகர்களை தொடர்பில் வைத்துக்கொண்டார்.

இணையவாசிகள் எந்த அளவுக்கு கவர்ச்சி கேட்கிறார்களோ அதற்கு ஏற்ற பணம் வசூலித்தார்.

அதாவது பிக்கினி உடையில் கவர்ச்சி காட்ட வேண்டுமானால் அதற்கு தனி பணம், ஆபாச வீடியோக்களுக்கு தனி பணம் இப்படி ஒவ்வொரு ஒவ்வொருவற்றிற்கும் ஒரு ரேட் பேசி பணத்தை சம்பாதித்து வந்தார்.

அப்படியான நேரத்தில் அவரது கவர்ச்சியை பார்த்து முத்தின கத்திரிக்காய், ஆம்பள, இளமை ஊஞ்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ஆபாசமான கதாபாத்திரத்தில் நடித்த முகம் சுளிக்க வைத்தார்.

இதை எடுத்து அவர் ஆன்டி கவர்ச்சி என விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கிரண் ரத்தோட் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதாவது நடிகை கிரண்… நீங்கள் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தீர்கள்.

ஆனால், தற்பொழுது மோசமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் அளவுக்கு இறங்கி வந்து விட்டீர்களே அந்த அளவுக்கு உங்களுக்கு என்ன தேவை ஏற்பட்டது?

திருமண வாழ்க்கை தான் எல்லாத்துக்கும் காரணம்:

என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை கிரண் என்னுடைய திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை.

இதனால் எனக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட்டது. வீட்டு வாடகைக்கு கூட பணமில்லாத சூழ்நிலையை எனக்கு ஏற்பட்டது.

அதிலிருந்து மீண்டு வரத்தான் நான் எனக்கு தெரிந்த விஷயங்களை செய்ய ஆரம்பித்தேன். எதற்காக இப்படியான புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள் என்று என்னிடம் கேள்வி கேட்கும் யாராவது என்னுடைய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறீர்களா..?

எனக்கு அந்த தேவை:

எனக்கு உண்டான உணவு செலவு, என்னுடைய தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், ஆடைகளுக்கான செலவு, என்னுடைய வீட்டின் வாடகை, என இவற்றை செலுத்துவதற்கு யாரு ரெடியா இருக்கீங்க..?

யாருமே கிடையாது.. என்னுடைய தேவைகளை நான் தான் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். எனக்கு இந்த தேவைகள் இருக்கிறது.

அதனால் தான் நான் எனக்கு தெரிந்த வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.. என வெட்கமே இல்லாமல் ஓப்பனாக பேசி இருக்கிறார் நடிகை கிரண்.

---- Advertisement ----