குடி போதையில் ஆண் நண்பருடன்.. எதிர்நீச்சல் மதுமிதா செய்த பலே வேலை.. போலீஸார் தீவிர விசாரணை..!

குடி போதையில் ஆண் நண்பருடன்.. எதிர்நீச்சல் மதுமிதா செய்த பலே வேலை.. போலீஸார் தீவிர விசாரணை..!

இந்த பூனையும் பால் குடிக்குமா, என்பது போல சில சீரியல் நடிகைகள், சினிமா நடிகைகள், பார்ப்பதற்கு குடும்ப பாங்கான தோற்றத்திலும், கவுரவமான கண்ணியமான நடிப்பில் ரசிகர்களை வெகு எளிதாக கவர்ந்து விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகைகள், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அங்கு போனால், கவர்ச்சியில் எக்கச்சக்க தாராளம் காட்டுகின்றனர்.ஏனென்றால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெண்களை மதிக்கிற, போற்றுகிற கலாசாரம் இருக்கிறது.

அதனால் மோசமான கேரக்டர்களில் நடித்தால், கிளாமராக பல காட்சிகளில் தோன்றினால் நடிகை மீதான இமேஜ் போய்விடும்.அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தெலுங்கில் அந்த பிரச்னை இல்லை. கவர்ச்சி காட்டினால், ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

அப்படி தான் இப்போது சீரியல் நடிகைகள் சிலரது சின்னத்திரை வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும் வேறு வேறாக இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல்

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுவும் இந்த சீரியலில் மறைந்த மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கேரக்டர், பெரும்பாலான மக்களின் மனங்களை கவர்ந்தது.

இதையும் படியுங்கள்: ஏத்தி விட்ட ஏணியை எட்டி உடைத்த நயன்தாரா.. விளாசும் ரசிகர்கள்..

ஆனால் துரதிஷ்டவசமாக அவர் திடீரென இறந்த நிலையில் அவரது கேரக்டரில் இப்போது நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இருந்தாலும் மாரிமுத்து அளவுக்கு இந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி பிரகாசிக்கவில்லை என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.

மதுமிதா

இந்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருபவர் மதுமிதா. இவருக்கு தமிழ் ரசிகர்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும், பாராட்டும் இருந்து வருகிறது.

இதே போல் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்துவரும் மதுமிதா, அதில் பயங்கரமாக ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார். குறிப்பாக நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: இதற்கு பிறகு தான்.. உடலுறவு விஷயத்தில் ஈடுபாடு அதிகமாச்சு.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!

இந்த வீடியோக்கள் செம வைரலான நிலையில், அதை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும், அட இது எதிர்நீச்சல் ஜனனியா என வாயைப் பொத்தி அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். தமிழில் இப்படி, தெலுங்கில் அப்படியா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து

இந்த சூழலில் குடிபோதையில் ஆண் நண்பருடன் ஒருவருடன் வாகனத்தில் சென்ற மதுமிதா, எதிரில் வந்த போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

குடிபோதையில் நடந்த இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சீரியல் நடிகை மதுமிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.