Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மணிவண்ணன் அவர்களின் சினிமாவை மிஞ்சும் காதல் கதை.. தெரிஞ்சா ஷாக்எ ஆகிடுவீங்க..!

Tamil Cinema News

மணிவண்ணன் அவர்களின் சினிமாவை மிஞ்சும் காதல் கதை.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சினிமாவில் இயக்குனராக இருந்து பின்னர் நடிகராக மாறியவர் மணிவண்ணன். அவர் இயக்கிய வாழ்க்கைச் சக்கரம், அமைதிப்படை, 100வது நாள் போன்ற பல படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

மணிவண்ணன்

துவக்கத்தில் தனது படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்த மணிவண்ணன் பிறகு காமெடி, வில்லன், குணச்சித்திரம் என முழுநேர நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக 1990 களில் அவர் ஏராளமான படங்களில் நடித்தார்.

அமைதிப்படை படத்தில் சத்யராஜூம், மணிவண்ணனும் அரசியல் நையாண்டி செய்து நடித்து காட்சிகள், பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

உள்ளத்தை அள்ளித் தா

தொடர்ந்து உள்ளத்தை அள்ளித் தா படத்தில் காமெடி ரோலில் நடித்த மணிவண்ணன் பிறகு சூரிய வம்சம், படையப்பா, சங்கமம், அவ்வை சண்முகி, சிவாஜி, பட்ஜெட் பத்மநாபன், துள்ளாத மனமும் துள்ளும் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

--Advertisement--

இந்நிலையில் மணிவண்ணன், தனது குருநாதர் பாரதிராஜாவிடமே திருமணம் செய்துக்கொள்ள பெண் கேட்ட சம்பவம் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்: துளி மேக்கப் இல்லாமல் நடிகை திரிஷா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..

மாப்பிள்ளை தேடிக்கொண்டு

பாரதிராஜாவின் அம்மாவுக்கு தெரிந்த பெண் ஒருவர் சென்னையில் இருந்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு, மாப்பிள்ளை தேடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது யதார்த்தமான ஒருநாள் பாரதிராஜாவும், மணிவண்ணனும் மயிலாப்பூரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்கு காரில் சென்றனர். அங்கு சென்றுவிட்டு திரும்பி காரில் வந்துள்ளனர்.

அந்த பெண்ணை நானே…

அப்படி காரில் திரும்பி வரும்போது, அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாக பாரதிராஜா பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது திடீரென பாரதிராஜாவிடம் குறுக்கிட்ட மணிவண்ணன், அந்த பெண்ணை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் பாரதிராஜா மணிவண்ணன் கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஓர் ஆண்டு கடந்த நிலையில், அந்த பெண்ணையே மணிவண்ணனுக்கு, பாரதிராஜா திருமணம் முடித்து வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: பெற்ற தாயிடமே சில்க் ஸ்மிதா இதை செய்தார்.. மிகப்பெரிய தவறு.. உடம்பு கூசும் ரகசியம் உடைத்த கவர்ச்சி நடிகை..

ரகுவண்ணன் – ஜோதி

மணிவண்ணனின் மனைவி பெயர் செங்கமலம். இந்த தம்பதிக்கு ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.

தனது குரு பாரதிராஜாவின் ஆசியுடன் மணிவண்ணன் இயக்கிய முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. அதன்பிறகு அவர் இயக்கிய படம் ஜோதி அவருக்கு மிகவும் பிடித்துப்போன படமாக அமைந்தது. அதனால் தனது மகளுக்கு ஜோதி என பெயரிட்டவர் மணிவண்ணன்.

சினிமாவை மிஞ்சும் காதல்

வழக்கமாக சினிமாவில்தான் இப்படி ஏதேச்சையாக பார்த்த பெண்ணை, திருமணம் செய்ய ஹீரோக்கள் விரும்புவார்கள். ஆனால் பாரதிராஜா குடும்பத்துக்கு வேண்டிய ஒரு பெண்ணை, நேரடியாக பாரதிராஜாவிடமே பெண் கேட்டது சிஷ்யர் மணிவண்ணனின் தைரியமும், காதலும் தான்.

இப்படி மணிவண்ணன் அவர்களின் சினிமாவை மிஞ்சும் காதல் கதை மிகவும் சுவாரசியமானதாக இருந்திருக்கிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top