என்னோட இந்த உறுப்பு பெருசா இருக்குன்னு சொல்றாங்க.. காரணம் இது தான்.. நீலிமா ராணி பேச்சு..!

சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் சிறந்த கதைகளில் நடித்து, மக்கள் மத்தியில் மிக குறுகிய காலத்தில் பிரபலமாகிறார்கள். அதன்பிறகு பொதுவெளியில் நடிகைகளாக ரசிகர்களால் பார்க்கப்படும் போது, எப்படி பாராட்டப்படுகிறார்களோ அதே போல் ஒரு கட்டத்தில் அவர்கள் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

அதாவது பாராட்டு வரக்கூடிய அதே இடத்தில், மிக மோசமான விமர்சனங்களும் வருவதை நடிகர்கள், நடிகைகள் சகித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

நீலிமா ராணி

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் நீலிமா ராணி. பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், அமளி துமளி போன்ற பல படங்களில் நடித்தவர் நீலிமா ராணி.

டிவி சீரியல்களில்…

இவர் சினிமாவில் நடித்ததை விட டிவி சீரியல்களில் நடித்தது தான் அதிகம். இதுவரை 50க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் நீலிமா ராணி நடித்திருக்கிறார். அதில் மெட்டி ஒலி, கோலங்கள், புதுமைப் பெண், தென்றல், செல்லமே உள்ளிட்ட சீரியல்களில் இவருக்கு இவரது நடிப்புக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

--Advertisement--

நான் மகான் அல்ல படத்துக்கு பிறகு, நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், நீலிமா ராணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மோசமான விமர்சனம்

இந்நிலையில் திருமணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நீலிமா ராணி குறித்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து மிக மோசமாக விமர்சிக்கப்படுவது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நீலிமா ராணி பேசியிருக்கிறார்.

குண்டாகி விட்டேன்

சமூக வலைதளங்களில், என்னை மிக மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். நான் அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை. எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அதனால் நான் குண்டாகி விட்டேன்.

மார்பகங்கள் பெரிதாக இருக்கிறது

சமூக வலைதளங்களில் சிலர் என்னுடைய மார்பகங்கள் பெரிதாக இருக்கிறது என்று கமெண்ட் செய்கிறார்கள் என்று, அந்த நேர்காணலில் தன்னுடைய வருத்தத்தை நீலிமா ராணி தெரிவித்துள்ளார்.

பெண்களைப் பற்றி பொதுவாக விமர்சனம் செய்வது என்பது தவறு. அதுவும் உடல் ரீதியாக அவர்கள் மனம் நோகும் படியாக இது போன்ற விமர்சனங்கள் செய்வதை கண்டிப்பாக ரசிகர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒருவருடைய உடல் தோற்றத்தை வைத்து அவரை இழிவுப்படுத்துவது என்பது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமாகவே அது பார்க்கப்படுகிறது.

என்னோட மார்பகம் பெருசா இருக்குன்னு சொல்றாங்க.. காரணம் நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயானதால் குண்டாகி விட்டேன் என்று. நீலிமா ராணி வருத்தப்பட்டு பேசியிருப்பது, வைரலாகி வருகிறது.