நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்தது ஏன்..? மீனா சொன்ன குபீர் காரணத்தை கேட்டீங்களா..?

நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்தது ஏன்..? மீனா சொன்ன குபீர் காரணத்தை கேட்டீங்களா..?

தமிழ் திரைப்பட உலக வரலாற்றில் வசூலில் மட்டுமல்லாமல் நமது கலாச்சாரத்தை எடுத்துச் சொன்ன திரைப்படங்களில் ஒன்றாக திகழ்வது நாட்டாமை திரைப்படம்.

இதையும் படிங்க: இந்த சூர்யா பட பாடல் சினேகன் எனக்காக எழுதுனது.. ரகசியம் உடைத்த கன்னிகா..


இந்த திரைப்படமானது 1994-ஆம் ஆண்டு வெளி வந்தது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பல முக்கிய நடிகர்களின் நடிப்பில் வெளி வந்தது.

நாட்டாமை திரைப்படம்..

தமிழ் திரை உலகில் அசாத்திய வசூலைத் தந்த இந்த நாட்டாமை திரைப்படம் சரத்குமார் நடிப்பில் குஷ்பூ, மனோரமா, ராஜா, ரவிந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம் போன்றவர்களின் நடிப்பில் வெளி வந்தது.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார்கள். அது போல மீனா இந்த கேரக்டரில் நடிப்பதற்கு ஆரம்பத்தில் நோ சொன்ன செய்தியை அண்மை பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

மீனா நடிக்க மறுத்த காரணம்..

இதற்காக முதல் முதலில் நாட்டாமை படத்தில் நடிப்பதற்காக கேட்ட போது நான் வேண்டாம் என்று தான் சொன்னேன். அதற்கு காரணம் அந்த சமயத்தில் மிகவும் டைட்டான ஷூட்டிங் இருந்தது. அத்தோடு போதிய நேரம் இல்லாத காரணத்தால் அந்த படத்தில் நடிப்பதை தவிர்த்து விட நான் நினைத்தேன்.

இது மட்டும் காரணம் அல்ல. அந்த படத்தில் குஷ்பூ என்னை விட சீனியரான ஒரு நல்ல நடிகை இருக்கிறார். அத்தோடு இளம் நடிகையான சங்கவி போன்றவர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்து கொண்டு எனக்கு அந்த படத்தில் கொடுக்கப்படும் ரோலில் என்ன தான் அப்படி இருக்கும் என்று நினைத்து தான் வேண்டாம் என்று சொன்னேன்.


ஓ.. இது தான் ரீசனா..

என்னிடம் பலரும் அந்த படத்தை நழுவ விட்டுவிட வேண்டாம். மிகச் சரியான நல்ல இயக்குனர். அந்த வாய்ப்பு அது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவர் நாட்களை அதிகம் எடுத்துக் கொள்ள மாட்டார். 20 நாட்களில் எல்லாம் முடித்து தந்து விடுவார் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்தார்கள்.

கே எஸ் ரவிக்குமார் எனக்கு விருப்பமான ஒரு இயக்குனர்களின் இருக்கிறார் என்றாலும் அவரது படத்தை வேண்டாம் என்று நான் மறுத்துச் சொன்னது இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.

எதனால் மறுப்பு தெரிவித்தேன் என்ற விஷயமும் அவருக்கு நன்றாக தெரியும். என்னிடம் அந்த படத்தில் நடித்து நல்ல பெயரும் கிடைத்தது எனக் கூறியிருந்தார். மேலும் சரத்குமாருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு கேரக்டர்களையும் அவர் சிறப்பாக செய்திருந்தார் என்பதை பதிவு செய்தார்.


இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பரவலாக பரவிய இந்த காரணத்தால் நாட்டாமை திரைப்படத்தில் மீனா நடிக்க மறுப்பதற்கான காரணமா? என்று ரசிகர்கள் அனைவரும் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். இந்த குபீர் காரணத்தை கேட்ட பலரும் நல்ல வேளை இந்த படத்தை மிஸ் பண்ணாமல் நடித்தாரே என்று கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சுற்றிலும் ஆண்கள்.. புலி ஜட்டி அணிந்து கொண்டு.. நீச்சல் குளத்தில் ஹன்சிகா.. ஏக்க பெருமூச்சு விடும்ரசிகர்கள்..!

மேலும் இந்த இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக காட்டு தீ போல பரவி வருவதோடு மீனா சொன்ன குபீர் காரணத்தை அவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கும் பதிவுகளில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.