இந்த சூர்யா பட பாடல் சினேகன் எனக்காக எழுதுனது.. ரகசியம் உடைத்த கன்னிகா..

இந்த சூர்யா பட பாடல் சினேகன் எனக்காக எழுதுனது.. ரகசியம் உடைத்த கன்னிகா..

காதல் என்றாலே கண்மூடித்தனமானது என்று பலர் சொல்லுவதும் உண்மையோ என்று எண்ணக்கூடிய வகையில் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் பாடல் ஆசிரியர் சினேகன்.

அவரது மனைவிக்காக எழுதிய பாடல் தான் சூர்யா சூரரை போற்று திரைப்படத்தில் இடம் பிடித்த பாடலை எழுதியது என்ற உண்மை தற்போது அவரது மனைவியின் மூலம் வெளிவந்துள்ளது. அதனைப் பற்றிய விரிவான பதிவினை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.


சினேகன் எனக்காக எழுதினது..

கவிஞர் வாலி திரைப்பட பாடல் ஆசிரியர் அவர் எழுதிய பாடல்கள் இன்றும் எவர்கிரீன் பாடல்களாக காதலர்கள் மத்தியில் அதிக அளவு ஈர்க்கப்பட்டு கேட்கட்டும் வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அப்படிப்பட்ட வாலியின் வார்த்தைகளால் பாராட்டுதனை பெற்ற சினேகன் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இதையும் படிங்க: Zoom பண்ணி பாத்தவங்க கைய தூக்கிடு.. ஓட்டையான சட்டையில் உச்சகட்ட கிளாமர் காட்டும் மாளவிகா..!

இன்றைய தலைமுறை விரும்பக்கூடிய காதல் பாடல்களையும், தத்துவப் பாடல்களையும் பல திரைப்படங்களில் எழுதி தனது அபார திறமையை காட்டியவர். வந்தா இவரைப் போல வரணும் என்று முன்னுதாரணமாக காட்டக்கூடிய வகையில் சிநேகனது வாழ்க்கை அமைந்துள்ளது.


இவர் நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததை அடுத்து ரகசியமாக ஒரு பெண்ணை பல ஆண்டுகள் காதலித்து வந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசமும் மிகப்பெரிய வித்தியாசம்.

சூர்யா பட பாடல்..

எனினும் இருவரும் காதல் செய்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு இன்று சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த திருமணம் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இவரது மனைவியும் திறமையான நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் சினேகனுக்கு ஏற்ற துணைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இதை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் சினேகன் மனைவி கன்னிகா பேசிய போது சூர்யா படத்தில் இடம் பிடித்த பாடல் தனக்காக எழுதப்பட்ட பாடல் என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அப்படி எந்த பாடலை அவர் கூறியிருந்தார் தெரியுமா? காட்டுப் பயலே என்ற பாடல் தான் இந்த பாடல் என்பதை சொன்னதோடு தனக்கு முதல் முதலாக ப்ரபோஸ் செய்யவும் ஒரு கவிதையை எழுதி அனுப்பியிருந்தார். அதுவும் என் பிறந்தநாள் பரிசாக எழுதியது என்ற விபரத்தை கூறினார்.


ரகசியம் உடைத்த கன்னிகா..

யாரு நீ யாரோ நான் என்று தொடங்கக்கூடிய அந்த கவிதை இன்று வரை தன்னால் மறக்க முடியாத கவிதை என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் எப்போதுமே பிரியாமல் இருப்பேன் என்று கடைசியில் முடித்த விஷயம் இன்று வரை அப்படியே நிதர்சனமாக உள்ளது என்பதை காதல் பொங்க தெரிவித்தார்.

இதையும் படிங்க: இரட்டை குழந்தைகளால் ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பிரபல நட்சத்திர ஜோடி..

அத்தோடு காட்டுப் பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ முரட்டு பையன் முயல தூக்கிப் போக வந்த பயடா நீ என்ற பாடல் வரிகள் தனக்காக எழுதப்பட்டது என்ற விஷயத்தையும் வெளிப்படுத்தியதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தார்கள்.

அதிலும் யான பசி நான் உனக்கு யான பசி சோளப்பொரி நீ எனக்கு சோள பொரி போன்ற வரிகள் அவரை கவர்ந்த வரிகள் எனக் கூறியதோடு தன் காதலுக்கு தூது விட்ட அந்த கவிதையையும் முழுமையாக சொல்லி அசத்தினார்.


இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் அதிக அளவு பரவி வருவதோடு சூர்யா நடிப்பில் வெளி வந்த காட்டுப் பயலே பாடல் பிறந்த விதத்தைப் பற்றி ரசிகர்கள் அறிந்து கொண்டு அனைவரோடும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் கன்னிகாவின் மீது கொண்டிருந்த காதலை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி உள்ளது என்பதை நிதர்சனமாக பேசி வரும் ரசிகர்கள் அனைவரும் என்றென்றும் காதல் வாழ்க. நீங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற ஆண்டவனை வேண்டுவதாக சொல்லி இருக்கிறார்கள்.