Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

மகளின் நிச்சயதார்த்தம் நடந்த சமயத்தில் நடிகர் முரளி இறந்ததற்கு காரணம் யார் தெரியுமா..?

கர்நாடகாவில் இருக்கும் பெங்களூருவை சேர்ந்த நடிகர் முரளி தமிழ் திரைப்படங்களில் ஆறுவதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காதல் மன்னனாக திகழ்ந்தார். காதல் திரைப்படங்களுக்கு இலக்கணம் வகுத்த பெருமை நடிகர் முரளியை சாரும்.


அந்த வகையில் நடிகை முரளி 1984-இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 1990-இல் வெளி வந்த புது வசந்தம் திரைப்படம் இவர் வாழ்க்கையில் வசந்தத்தை சேர்த்தது.

மகளின் நிச்சயதார்த்தம்..

இந்தப் படத்தின் மூலம் நல்ல பேமஸை அடைந்த நடிகர் முரளி 1991-ஆம் ஆண்டு நடித்த இதயம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் முன்னணி நாயகனாக உயர்ந்தார்.

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த கடல் பூக்கள் திரைப்படத்தில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இவரது தந்தை சித்தலிங்கய்யா கன்னடத்தில் சில படங்களை தயாரித்து இருக்கிறார்.


திரைப்படங்களில் சிறப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் போது நடிகர் முரளிக்கும் சோபா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு அதர்வா ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் காவியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

--Advertisement--

நடிகர் முரளி இறந்ததற்கான காரணம்..

இந்நிலையில் நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது திரையுலகில் முன்னணி நடிகராக கூடிய முயற்சிகளில் களம் இறங்கி பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம் பாணா காத்தாடி. இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் முரளி நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் பலரது மனங்களில் தனது தந்தையைப் போல நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.


தற்போது அதர்வா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் ரசிகர் படையை அதிகரித்து இருக்கிறார். இந்நிலையில் முரளி பற்றிய சில விஷயங்கள் தற்போது இணையத்தில் கசிந்து அது மட்டுமல்லாமல் அவர் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்பது தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.

விஷயம் தெரிந்த அதிர்ந்து போவீங்க..

இதற்கு காரணம் நடிகர் முரளியின் மகள் காவியாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த சமயத்தில் தான் நடிகர் முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனது 47-வது வயதில் இயற்கை எய்தினார்.

திடீர் என முரளிக்கு இறப்பு வந்ததை அடுத்து தமிழகமே மிகச் சிறந்த நடிகரை இழந்து விட்ட நிலையில் துயரத்தில் மூழ்கியது. திரைத்துறை மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் ஒரு மிகப்பெரிய கலக்கத்தை இவரது மரணம் ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மகனின் நிச்சயதார்த்தம் சமயத்தில் நடிகர் முரளி இறந்ததற்கு காரணம் மாரடைப்பு என்பதை அறிந்து கொண்ட ரசிகர்கள் மீளா துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.


இதயம் படத்தின் மூலம் நமது இதயத்தில் இடம் பிடித்த நடிகர் முரளிக்கு இதயத்தில் ஏற்பட்ட கோளாறுக்கு அவரது குடி பழக்கம் காரணமாக இருந்ததாக பல்வேறு வகைகளில் செய்திகள் வெளி வந்ததும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி இருப்பதோடு முரளிக்கு நேர்ந்த மாரடைப்பு நோய் இளைஞர்களை பாதிக்காமல் இருக்க ஆரோக்கியமாக பழக்க வழக்கம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top