“திருமணத்திற்கு முன்பே அது நடந்துடுச்சு..” கூச்சமே இல்லாமல் கூறிய நடிகர் நரேனின் மனைவி..!

அட ..கருமமே.. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி எல்லாம் நடக்குமா? என்று யோசிக்க கூடிய வகையில் தற்போது கைதி படத்தில் நடித்த நரேனின் மனைவி மஞ்சு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி உள்ளது.

நடிகர் நரேன் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான நிழலுகுத்து என்ற மலையாள திரைப்படத்தில் தான் முதன் முதலில் நடிகராக களம் இறக்கப்பட்டார்.

இதனை அடுத்து தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளி வந்த சித்திரம் பேசுதடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வந்த நரேன் மீண்டும் மிஸ்கின் இயக்கத்தில் ஆன்ட்டி ஹீரோவாக முகமூடி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தமிழ், மலையாளத் திரைப்படங்களில் மாறி, மாறி நடித்துக் கொண்டு இருக்கும் போது தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளி வந்த கைதி திரைப்படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

--Advertisement--

இவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளரான பணியாற்றிய மஞ்சு ஹரிதாஸை நீண்ட நெடு நாட்களாக காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு 14 வயதில் தன்மையா என்ற மகள் இருக்கிறார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் தங்கள் காதல் திருமணம் பற்றி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த நரேனின் மனைவி மஞ்சு நான் தொகுப்பாளினியாக இருக்கும் போதே நரேனை பார்த்தேன். எங்கள் இருவருக்கும் காதல் பிறந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளாக காதலித்தோம்.

காதலோடு நின்று விடாமல் அந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் டேட்டிங் சென்று வந்து உள்ளோம் என்று கூறிய பேச்சு ,தற்போது வைரலாக பலர் மத்தியிலும் பேசப்படுகிறது. இதனை அடுத்து கல்யாணத்திற்கு முன்பே இப்படியா? என்பது போன்ற வாசகங்களை முன் வைத்து பலரும் பல விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாத மஞ்சு தன் கணவர் நடித்த படத்தில் மிகவும் பிடித்த படம் அஞ்சாதே என்ற திரைப்படம் தான் என்று கூறி இருக்கிறார்.