நான் இப்படித்தான் கதை எழுதுவேன்.. பிரஷாந்த் நீல் கூறியதை கேட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

வயலன்ஸ் படங்களை இயக்கி வெற்றியை சுவைத்த கேஜிஎஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிய அனைத்துப் படங்களும் பாக்ஸ் ஆபிஸ் கிட் என கூறலாம்.

இவர் தனது படத்தில் வைத்த வசனம் என்னை வெல்ல நினைப்பவன் எவன் என்பது உங்கள் நினைவில் இருக்கலாம். தலைக்கனத்தோடு இந்த வசனத்தை வைத்த இவர் தற்போது அதே தலைக்கனத்தோடு ஓபன் ஆக தன்னைப் பற்றிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

பிரபலமான செலிபிரிட்டி தன்னை பற்றி ஓப்பனாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த தனிப்பட்ட கருத்து ரசிகர்கள் மத்தியில் சிந்தனையை மாற்றி அவர்களை தடம் மாற்ற வழி வகுக்கும் என்பது கூட புரியாமல் கூறி விட்டாரா? என்று பலரும் பல விதமான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இவர் தனக்கு மதுப்பழக்கம் உள்ளது என்பதை கூறியதோடு மட்டுமல்லாமல் மது குடித்தால் மட்டுமே தன்னால் கதை எழுத முடியும் என்று ஒரு இன்டர்வியூவில்,  ஆங்கர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

து மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை நீங்கள் எடிட் பண்ணாமல் அப்படியே போட்டுக் கொள்ளுங்கள் என்று தைரியமாக இவர் பேசி இருக்கிறார். நான் பண சம்பாதிக்க தான் திரைத்துறைக்கு வந்தேன் பணத்துக்குப் பின்பு தான் கலை என் மனதில் பட்டதை ஒழிவு மறைவில்லாமல் கூறுகிறேன் என்று இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்திருக்கிறார்.

--Advertisement--

இவர் இயக்கத்தில் வெளி வந்த கேஜிஎப் பாகங்களின் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பிரபாஸ் நடிப்பில் வெளி வந்த சலார் படமும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது.

எனவே பிரம்மாண்ட படங்களை இயக்கி அதிக வசூலில் தெறிக்க விடுகின்ற டைரக்டர் என்றால் அது பிரசாத் நீல் என்ற பெயருக்கு சொந்தக்காரராக மாறியிருக்கும் இவர் இது போன்று வெளிப்படையாக கூறி இருக்கும் கருத்து காரணமாக இளம் தலைமுறையினர் தேவையில்லாத மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.

தற்போது இணையம் முழுவதும் அவர் ஓபன் ஆக தன்னை பற்றி கூறிய செய்தியை பரவலாக ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பகிர்ந்து வருவதோடு பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.