ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தவர். அந்த சீரியலில் மீனாட்சி என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்ததால், சிலர் இவரை மீனாட்சி என்றும் சொல்வதுண்டு. பெங்களூருவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையில் பிஸியாக இருந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில், சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் பாரிஜாதா, ரங்கநாயகா ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், பெரிய அளவில் சினிமாவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, கீதாஞ்சலி, நாம் இருவர், நமக்கு இருவர் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் பெயர், தினேஷ். பிரிவோம்,சந்திப்போம் சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்த போது, அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்துக் கொண்டனர்.
நாச்சியார்புரம் என்ற சீரியலில் இருவரும் நடித்த போது, ஏற்பட்ட மனக்கசப்பால், இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்போது, தனது பெற்றோருடன் ரக்சிதா வசித்து வருகிறார்.
சினிமா படங்கள், டிவி சீரியல்களை காட்டிலும் சமீபத்தில் நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்ற வகையில், மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர், இவர் மீது காதல் கொண்டு பின்னாலேயே சுற்றித் திரிந்தார். அவரை காதலிப்பதாகவும் ஜாடை மாடையாக சொல்லிப் பார்த்தார்.
ஆனால், ரக்சிதா அசைந்து கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில், அவர் கதறி கதறி அழுததைப் பார்த்து ஆறுதல் சொன்னார் ரக்சிதா. இதுவெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது வைரலாக பரவியது. ராபர்ட் மாஸ்டர்தான், மூக்குத்தி என்ற பட்டப்பெயரை ரக்சிதாவுக்கு அளித்தது.
--Advertisement--
ரக்சிதா, அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். குறிப்பாக, மாடல் ஆடைகளை காட்டிலும், ரக்சிதா முக அழகு, உடல்வாகு தோற்றத்துக்கு புடவை அம்சமாக அமைகிறது. அந்த வகையில், புடவை கட்டிய அழகு புயலாக, இன்ஸ்டாகிராமில் காட்சியளிக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள், செம வைரலாகி வருகின்றன. ஆனால், அவ்வப்போது மாடர்ன் டிரஸ்களிலும் அம்மணி போட்டோஸ் அப்டேட் செய்கிறார்.
ரக்சிதா, சமீபத்தில் புதிதாக சிவப்பு நிறத்தில் கார் ஒன்று வாங்கி இருக்கிறார். கார் விற்பனையகத்தில், அந்த புதிய காரின் முன் நின்று, சாவியை வாங்கும் காட்சியை, புகைப்படங்களாக எடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில், தன் தோழிகளுடன் ரக்சிதா மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இதில் ஆச்சரியம் என்னவெனில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதாவுடன் சக போட்டியாளராக கலந்துகொண்ட ஷிவின் உடன் இருக்கிறார்.
அவரும் ரக்சிதாவின் அருகில் நின்று, புதியதாக தனது தோழி கார் வாங்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதாவும், ஷிவினும் நன்கு பரிச்சயமானவர்களாகி, ஒரு கட்டத்தில் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பும், அவர்களது நட்பு இன்றும் தொடர்வதை இ;ந்த புகைப்படங்கள் நிரூபிக்கின்றன.
தற்போது, ரக்சிதா புதிய கார் வாங்கியது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘ரக்சிதா மேடம், எனக்கு கார் ஓட்டத் தெரியும், உங்களது காரை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் :உடன் நேரில் வரலாமா?’ என கமெண்ட் செய்து, ரசிகர்கள் பலரும், ரக்சிதாவை கலாய்த்து வருகின்றனர்.