Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என்கிட்ட 3 வருஷம் கழிச்சு அதை சொன்னாரு.. ஆனால்.. நான்.. ஓப்பனாக பேசிய ரம்யா பாண்டியன்..!

ஒரு நடிகை எத்தனை படங்களில் நடிக்கிறார் என்பது முக்கியமில்லை. சில படங்களில் நடித்திருந்தாலும் கூட நல்ல கேரக்டர்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால், அவர் நிச்சயம் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்று விடுவார்.

அப்படி பல நடிகைகள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்று இருக்கிறார்கள்.

ஏனெனில் அவர்கள் நடித்தது குறைவான படங்களாக இருந்தாலும், அந்த சில படங்களில், சில காட்சிகளிலேயே அவர்கள் தங்களது தரமான, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட சில படங்களில் ரம்யா பாண்டியன் நடித்திருக்கிறார். அதற்கு முன்பாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி சமையல் போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.

பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4ல் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன், இதில் நான்காவது இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

சித்தப்பா அருண்பாண்டியன்

ரம்யா பாண்டியன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவ பொறியியல் படித்தவர். இவரின் தாய்மொழி தமிழ். இவரது சித்தப்பா பிரபல நடிகர் அருண்பாண்டியன். இவர்களது பூர்வீகம் திருநெல்வேலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் மணிரத்னம் உதவி இயக்குனராக இருந்த செல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் ரம்யா பாண்டியன் பணி புரிந்திருக்கிறார். அடுத்து பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் என்ற படத்தில் ரம்யா பாண்டியன் ஒரு கேரக்டரில் நடித்தார். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை.

ஜோக்கர் பட நாயகி

அதன் பிறகு குறைந்த செலவில் எடுக்கப்பட்ட டம்மி டபாசு என்ற 2015ம் ஆண்டில் வெளிவந்த படத்தில் ரம்யா பாண்டியன் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து இவர் டைரக்டர் ராஜமுருகன் இயக்கத்தில், 2016ல் வெளிவந்த ஜோக்கர் என்ற படத்தில் கூலி வேலைக்கு செல்லும் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். இதில் அவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

ஆண் தேவதை

தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார். மிகக் குறைவான படங்களை நடித்து இருந்தாலும், ரம்யா பாண்டியன் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஒரு முக்கிய நடிகையாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளாக…

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ரம்யா பாண்டியன் கூறியதாவது, நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போது, என்னை ஒருவர் 3 ஆண்டுகளாக பாலோ அப் செய்துக்கொண்டிருந்தார். நான் 21 ஜி பஸ்சில் போவேன்.

நான் எங்கே பஸ் ஏறுகிறோனோ, அங்கே தினமும் அவர் இருப்பார். நான் தினமும் ஒரே நேரத்துல போக மாட்டேன். டைமிங் வேற வேற மாதிரி இருக்கும்.

ஆனால் எல்லா டைமும் அவரை நான் அங்கே பார்த்திருக்கிறேன். அதே மாதிரி கிளாஸ் முடிந்து நான் திரும்பி வரும்போதும், அந்த நேரத்திலும் அவரை பார்த்திருக்கிறேன்.

அப்புறம் நான் யோசித்தேன். இவர் என்னுடைய டிபார்ட்மென்டும் கிடையாது. அப்புறம் எப்படி நான் வர்ற நேரத்துல இவர் கரெக்ட் டைமுக்கு இங்கே இருக்கிறார்.

ப்ரபோஸ் செய்தார்

அப்புறம் 3 ஆண்டுகள் கழித்து அவர் எனக்கு ப்ரபோஸ் செய்தார். எனக்கு உள்ளார அவ்வளவு பயம். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், இனிமேல் இப்படி எல்லாம் என்னை பாலோ அப் பண்ணிட்டு வராதீங்க. இப்படி ப்ரபோஸ் எல்லாம் பண்ணாதீங்க, அப்படீன்னு பயத்துலயே சொல்லிட்டு போயிட்டேன்.

அது என்னால மறக்க முடியாத ஒரு விஷயம் என்று கூறியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

மறுத்துவிட்டேன்

என்கிட்ட 3 வருஷம் கழிச்சு என்னை பாலோ செய்த ஒருவர் காதலை சொன்னார். ஆனால், நான் அந்த காதலை மறுத்துவிட்டேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top