பெண்களின் இந்த உறுப்பை இப்படித்தான் அழைக்க வேண்டும்.. நடிகை ரேகா நாயரை விளாசும் ரசிகர்கள்..!

பெண்கள் வாய் திறந்து பேசுவதற்கே வெட்கப்பட்ட காலம் என்று ஒரு காலம் இருந்தது. பிறகு பெண்கள் பேசத் தொடங்கினார்கள், பெண்கள், குடும்பம் சார்ந்து குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே பேசுவது என்பது முதலில் நாகரிகமாகவும், பிறகு அவர்களது உணர்வின் வெளிப்பாடுகளாகும் பார்க்கப்பட்டது.

அருவறுக்கத்தக்க வகையில்…

ஆனால் இப்போது எதை பேசுவது, எப்படி பேசுவது எந்த இடத்தில் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் சில பெண்கள் பேசுவதை பார்க்கும் போது, ஆண்களுக்கே மிகவும் அருவறுக்குத்தக்க வகையில், அவர்களது பேச்சு இருந்து வருகிறது.

குறிப்பாக சமூக வலைதளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காக, சில பெண்கள் ஆபாச நடனம் ஆடுகிறார்கள். குத்தாட்டம் போடுகிறார்கள்.

தங்களது அந்தரங்க உடல் பாகங்களை காட்டும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, அதற்கான வரவேற்பையும் பெறுகின்றனர்.

அதே நேரத்தில் சில பெண்கள், மிக மோசமாக அந்தரங்க விஷயங்களை, ஆபாச கருத்துகளை பொதுவெளியில் பேசி அதிர்ச்சியை தந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஒருவராக இருப்பவர்தான் ரேகா நாயர்.

--Advertisement--

ரேகா நாயர்

சமீபத்தில் வெளிவந்த நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ரேகா நாயர்.

இது தொடர்பாக கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், கடற்கரையில் வாக்கிங் சென்ற அவருடன், சண்டை போட்டு வாக்குவாதம் செய்த ரேகா நாயரின் அந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சையாக பேசி, மிகவும் ஆபாசமாக கருத்துகளை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துகிறார் ரேகா நாயர்.
மறைக்க வேண்டிய இடம் எது

இவர் சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலில் பேசியிருப்பது, பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் ரேகா நாயர் பேசியதாவது,

ஒரு ஆண் மறைக்க வேண்டிய இடம் எது, ஒரு பெண் மறைக்க வேண்டிய இடம் எது, ஆதி காலத்தில் பெண்களின் மு** மறைக்கப்படவே இல்லை. இன்றைக்கு இருக்கக்கூடிய ஓவியர்கள் மறைக்கிறார்கள்.

மு** என்பது சொல்லக்கூடாத ஒரு வார்த்தை என்றால், குழந்தைக்கு தரக்கூடிய பால் அதிகம் சுரக்கிற ஒரு இடத்தை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்.

மு** வழியாக வரக்கூடிய அந்த பாலை, தாய்ப்பால் என்று சொல்லி நான் அறிந்து விடுகிறேன். அந்த வார்த்தை தவறு என்றால், அந்த இடத்தை என்னவென்று சொல்வீர்கள்.

அதை அப்படிதான் சொல்ல வேண்டும்

காதல் என்பதை காதல் என்று தான் சொல்ல முடியும். கலவி என்பதை கலவி என்று தான் சொல்ல முடியும். கண்கள் என்பதை கண்கள் என்றுதான் சொல்ல முடியும்.

அதுபோல் மு** என்பதை மு** என்று தான் சொல்ல முடியும். அப்படி சொல்லக்கூடாது என்றால், அதற்கு மாற்றாக தமிழில் இன்னொரு வார்த்தையை கண்டுபிடிங்கள் என்று ரேகா நாயர் அந்த நேர்காணலில் பேசி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

பெண்களின் அந்தரங்கமான அந்த உறுப்பை இப்படித்தான் வெளிப்படையாக அழைக்க வேண்டும் என்று கூறிய நடிகை ரேகா நாயரை ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.