சவுக்கு சங்கர் கைது.. நிவேதா பெத்துராஜ் போட்ட பாத்திங்களா..? பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

ஓரிரு நாட்களாக ஊடகங்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கும் சவுக்கு சங்கர் கைது விஷயமானது தற்போது விஸ்வரூபம் எடுத்து வரக்கூடிய நிலையில் பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் இந்த கைதி நடவடிக்கை எதற்காக.. இப்படி எல்லாம் நடக்குமா? என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வரக்கூடிய வேளையில் நிவேதா பெத்துராஜ் செய்த விஷயத்தை பற்றி ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள்.

சவுக்கு சங்கர் கைது..

ஊடகங்களில் அதிக அளவு பேட்டிகளின் மூலம் பிரபலம் ஆன சவுக்கு சங்கர் கைது செய்த பட்டதை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

அதே சமயம் பெண் காவல் துறை அதிகாரிகளை பற்றி சவுக்கு சங்கர் கண்ணிய குறைவாக பேசியதை தவிர்த்து இருக்கலாம். அவர் பேசியதற்கான தண்டனை அவருக்கு கிடைப்பது தவறில்லை என ஒரு சாரார் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

---- Advertisement ----

மேலும் இந்த வழக்கானது எப்படி பயணிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்போது தான் உண்மை நிலை நமக்கு எளிதில் புரியும் என்பதோடு வழக்கின் போக்கும் தெள்ளத் தெளிவாகும்.

நிவேதா பெத்துராஜ் போட்ட பாத்திங்களா?

இதனை அடுத்து இந்த வழக்கின் மறுபக்கம் நடிகை நிவேதா பெத்துராஜ் மீது பகிரங்கமான குற்றச்சாட்டு ஒன்றினை வைத்து இருக்கிறார் சவுக்கு சங்கர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அந்த வகையில் நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் நடிகர் உதயநிதி இடையே நெருக்கமான நட்பு இருக்கிறது. இதன் காரணமாகத் தான் கோடிக்கணக்கான மதிப்பில் சொத்துக்களை வாங்கி நிவேதா பெத்துராஜ்க்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் யாருமே எதிர்பார்க்காத சில விஷயங்களை செய்திருக்கிறார் உதயநிதி என்ற பகீர் தகவல்களை வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசும் பொருள் ஆனது.

பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

இந்நிலையில் தன்னை சுதாரித்துக் கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ் எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள்.

நான் இன்னும் வாடகை வீட்டில் தான் வசித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு என சொந்த வீடு கூட கிடையாது யாரும் எனக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவி செய்யவில்லை என்று பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் கைதாகி இருப்பதைத் தொடர்ந்து தன்னுடைய Instagram பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவு செய்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். 

அதில் அவர் கூறிய விஷயமாவது ஈகோவை பட்டினி போடுங்கள்.. உயிருக்கு உணவளியுங்கள்.. என்ற கேப்சன் வைத்து மகிழ்ச்சியில் வைத்து இருக்கும் படியான ரியாக்ஷனை கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இதை பார்த்து வரும் ரசிகர்கள் சவுக்கையே தூக்கிட்டல்ல..  என எடக்கு மடக்கான கருத்துக்களை வெளியிட்டு அவருடைய பதிவை பங்கம் செய்து வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயம் இவ்வளவு சீரியஸான விஷயமாக ஆகும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் விவகாரம் வேறு விதமாக தடம் மாறி சென்று வருகிறது. எனவே எதிர் வரும் நாட்களில் இந்த பிரச்சனையின் உண்மை நிலை அனைவருக்கும் தெரிய வரும்.

---- Advertisement ----