Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

2 பசங்க.. அது இல்லாம எப்படி பண்ணுவீங்க.. ஒரு பெண்ணை உள்ளே விட்டால்.. ஷகீலா பேச்சு..!

மலையாள திரை உலகில் ஒரு கால கட்டத்தில் மலையாள முன்னணி ஹீரோக்களையே திணற வைத்த நடிகையாக நடிகை ஷகீலா திகழ்கிறார். இவரது படம் வெளி வருகிறது என்றால் மோகன்லால் முதல் மம்முட்டி வரை பயம் கொள்வார்கள்.


அடல்ட் படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை ஷகீலா மலையாள திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அதிக அளவு ரசிகர்களை பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

நடிகை ஷகீலா..

நடிகை ஷகீலாவை மலையாள திரையுலகில் அனைவரும் அன்போடு சைக்ளோன், லேடிலால் போன்ற பெயர்களால் அழைத்திருக்கிறார்கள்.

பல மலையாள திரைப்படங்களில் நடித்த இவருக்கு மலையாள திரையுலகம் தடை விதித்ததை அடுத்து சென்னைக்கு வந்து குடியேறிய இவர் தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

எனினும் கவர்ச்சி நடிகையும் தாண்டி பிட்டுப்பட நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட எவரது மறுபக்கத்தை விஜய் டிவியில் வெளி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் ரசிகர்கள் அனைவரும் அறிந்து கொண்டு இவரை அம்மா என்று அன்போடு அழைத்தார்கள்.

--Advertisement--

இதனை அடுத்து பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நடிகை ஷகீலா அண்மையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் இருவரை பேட்டி கண்டார்.


அந்தப் பேட்டியின் விவரத்தை பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

2 பசங்க அது இல்லாம எப்படி பண்ணுவீங்க..

அதில் பேசிய ஷகீலாவிடம் அந்த ஆண்கள் இரண்டு பேரும் எங்களைப் பார்த்து பலரும் கேட்கக்கூடிய கேள்வி என்னவென்றால் உனக்கு உங்கள் இருவருக்கும் மீசை தாடி இருக்கிறது.

நீங்கள் இருவரும் ஆண்கள் எப்படிடா உங்களுக்குள் அந்த விஷயம் நடக்கும். என்ன காதல் இது என்று எங்களை கேலி பேசுவார்கள்.

நாங்கள் தெரியாமல் கேட்கிறோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடக்கக்கூடிய அந்த உறவு மட்டும் தான் உடலுறவா..? கிடையாது.. நாங்கள் இருவரும் எங்களுக்கு பிடித்தது போல இருப்போம்.. இருவரும் ஒருவரை ஒருவர் ஒப்புக் கொண்டு தான் இதனை செய்கிறோம்..


ஒருவரை ஒருவரை பிடிக்கவில்லை என்றால் நாங்கள் எப்படி இப்படி ஒன்றாக இருப்போம் என கேள்வி எழுப்பி கேள்வி எழுப்பினார் அந்த ஓரினச்சேர்க்கையாளர்.

ஷகீலா பேச்சு..

இதை கேட்ட நடிகை ஷகீலா அதாவது பெண் ஒரு அறையில் இருக்கும் பொழுது அங்கே ஒரு ஆக்ரோஷமான மோசமான முரட்டுத்தனமான ஒரு ஆண் உள்ளே வந்தால் எப்படி பெண் பயப்படுவாள்.

அது போல ஒரு அறைக்குள் உங்களை வைத்து அந்த அறைக்குள் ஒரு பெண்ணை உள்ளே விட்டால் நீங்கள் அரண்டு போய் விடுவீர்கள் அப்படித்தானே என்று கேட்டார் ஷகீலா.

அதற்கு ஆமாம் எங்களை ஒரு அறையில் அடைத்து விட்டு ஒரு பெண்ணை உள்ளே விட்டால் நாங்கள் அரண்டு போய் விடுவோம். அதற்காக பெண்களை நாங்கள் அவமதிக்கிறோம்.. அவர்களை எதிர்க்கிறோம்.. என்று அர்த்தம் அல்ல..

ஒரு அக்கா தங்கையாக அவர்களுடன் நாங்கள் சகஜமாக பழகுகிறோம். ஆனால் எங்களுக்கு அந்த விஷயத்தில் பெண்களை கண்டால் பிடிப்பதில்லை என பேசி இருக்கிறார் அந்த ஓரினச்சேர்க்கையாளர்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு பெண்களை ஆண்ட விஷயத்தில் பிடிக்காது என்று ஓரின சேர்க்கையாளர் உறுதியாக கோரிக்கை நண்பர்களோடு அமர்ந்து ஏன் இவர் அப்படி பேசினார் என்பதை பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top