கையில் தான் அதை பண்ணுவேன்.. சில நேரங்களில் ரத்தமே வந்துடும்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..!

மலையாளத் திரையுலகில் பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய படங்களில் அதிக அளவு நடித்து மலையாளத்தில் முன்னணியின் நடிகர்களாக திகழும் மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை ரிலீஸ் செய்ய தயங்கக்கூடிய நிலையை உருவாக்கிய நடிகை ஷகீலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.


லேடி லால், சைக்ளோன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய நடிகை ஷகிலா, ஒரு காலகட்டத்தில் மலையாள திரைப்படத்தில் நடிக்க தடை விதித்ததை அடுத்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை ஷகீலா..

மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்து தனக்கு என்று ஆண் ரசிகர்களை அதிகளவு வைத்திருக்கும் நடிகை ஷகீலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதன் மூலம் ஷகீலாவின் மறுபக்கத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அவரை அன்போடு அம்மா என்று அழைக்க அவரும் அகம் மகிழ்ந்து அனைவரோடும் அன்பாக பழக ஆரம்பித்ததை அடுத்து நண்பர்கள் வட்டம் அதிகரித்தது.


அது மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததோடு மட்டுமல்லாமல் You tube சேனல்களுக்கு பேட்டியளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், சில தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், காமெடி நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

--Advertisement--

கையில தான் அதை பண்ணுவேன்..

இதனை அடுத்த நடிகை ஷகீலா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் நிறைய நேரங்களில் தவறான முடிவை எடுத்துக் கொள்ள முயற்சி செய்து இருக்கிறேன்.

நான் மனம் உடைந்து இருந்த நிலையில் எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லாத போது என்னுடைய கையில் தான் நானாகவே கட் செய்து கொள்வேன், இந்த பழக்கம் எனக்கு சிறு வயது முதல் இருந்தே உள்ளது.

சில நேரத்துல ரத்தமே வரும்..

இதற்கு முக்கியமான காரணம் யார் என்று கேட்டால் வேறு யாரும் கிடையாது. என்னுடைய அம்மா தான். நான் ஒரு விஷயத்தை செய்து விட்டேன் அது தவறு என்றால் உடனடியாக என் அம்மாவிடம் நான் சொல்லி விடுவேன்.


மேலும் இது வரை எந்த ஒரு விஷயத்தையும் என் அம்மாவிடம் மறைத்தது இல்லை. ஒரு வேளை மறைத்தால் அதுவே எனக்கு மன அழுத்தத்தை கொடுக்கும். அத்தோடு என்றாவது ஒரு நாள் மாட்டிக் கொள்வோமோ? என்ற பயத்தை உள்ளுக்குள் கொடுக்கும்.

ஷகீலா ஓப்பன் டாக்..

எனவே இது வரை நான் என்ன செய்திருந்தாலும் அதை என் அம்மாவிடம் அப்படியே சொல்லி விடுவேன். ஆனால் நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்தேன் என்று என் அம்மா என்னிடம் அடம் பிடிக்கும் போது எனது மனம் உடைந்து போய்விடும்.

அந்த சமயத்தில் சில நேரங்களில் தவறான முடிவுகளை நோக்கி நான் தள்ளப்படுவேன் அத்தோடு அந்த நேரத்தில் கையில் கட் செய்து கொள்வதை செய்திருக்கிறேன். இதனால் சில நேரங்களில் எனக்கு ரத்தமே வந்துவிடும் என ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை ஷகீலா.


இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருப்பதோடு, மிகவும் டென்ஷனான சமயத்தில் தன் கைகளை வெட்டிக் கொள்ளும் நடிகை ஷகீலா பற்றி பரபரப்பாக ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.