நம்பி சென்ற சில்க் ஸ்மிதா..! அதை கொடுத்து நாசம் செய்த இயக்குனர்..! பலரும் அறியாத தகவல்கள்..!

நடிகை சில்க் ஸ்மிதா ஆரம்ப காலங்களில் மிதமான கவர்ச்சி காட்சிகளில் தான் நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல படுமோசமான காட்சிகளில் நடிக்க தயாரானார் நடிகை சில்க் ஸ்மிதா.

இப்படி மாறியதற்கு பின்னால் அவர் மிகவும் நம்பிய ஒரு இயக்குனர் தான் காரணம். மிதமிஞ்சிய கவர்ச்சி காட்சிகளில் நடித்தால் நிச்சயமாக சினிமாவில் நிலைக்க முடியாது. மக்கள் தன்னை வெறுத்து விடுவார்கள் என்ற மனநிலையில் இருந்திருக்கிறார் சில்க் ஸ்மிதா.

ஆனால் ஒருமுறை ஒரே ஒரு பாடல் காட்சி நடிக்க வேண்டும் என்று பிரபல இயக்குனர் ஒருவர் அவரை அழைத்திருக்கிறார். இவரும் சென்று இருக்கிறார். இந்த பாடலில் மிதமான கவர்ச்சி தான் காட்டுகிறீர்கள் என்று சில்க் ஸ்மிதாவை ஏமாற்றி நடனமாட வைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் இந்த படத்தை இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இதில் ஐந்தாவது நாள் மதுபான விடுதி ஒன்றில் நடனம் ஆடுவது போன்ற ஒரு காட்சி.

--Advertisement--

ஐந்தாவது நாள் நீங்கள் மது குடித்துவிட்டு ஆட்டம் போடுவது போன்ற காட்சி என சில்க் ஸ்மிதாவை ஏமாற்றி குளிர்பானத்தில் நிஜமாகவே மதுவை கலந்து சில்க் ஸ்மிதாவிற்கு போதை ஏற்றிவிட்டு அதன் பிறகு மோசமான நடன அசைவுகள் கேமரா கோணங்கள் ஆகியவற்றை கொண்டு படமாக்கி இருக்கிறார்கள்.

இது குறித்து தெரியாமலே நடிகை சில்க் ஸ்மிதா இந்த பாடலை முடித்துக் கொடுத்திருக்கிறார். படம் வெளியான பிறகு தான் இவருக்கு தெரிந்திருக்கிறது இப்படியான காட்சிகள் எல்லாம் படமாக்கி இருக்கிறார்கள் என்று.

ஆனால், அதன் பிறகு ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால், பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்சிகளில் நடிக்கும் போது மது குடித்துவிட்டு நடிக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில், போதைக்கு அடிமையாக இருக்கிறார் நடிகை சில்க் ஸ்மிதா என்று கூறப்படுகிறது.

மிதமான கவர்ச்சி காட்சிகள் தான் என்று சில்க் ஸ்மிதாவை ஒப்பந்தம் செய்து விட்டு படப்பிடிப்பு தளத்தில் மது போதை ஏற்றி விட்டு அதன் பிறகு படுக்கையறை காட்சிகளை படமாக்கியுள்ளனர் சில இயக்குனர்கள்.

ஆனால், அப்படியான இயக்குனர்களை தான் நடிகை சில்க் ஸ்மிதா நம்பியிருக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரியும் போது அவர்களை வெறுத்து ஒதுக்கியுள்ளார்.