ஒரு தடவ போட்டதை திரும்ப போட மாட்டேன்.. இது தான் காரணம்..? சினேகா சொன்ன காரணத்தை பாருங்க..

ஒரு தடவ போட்டதை திரும்ப போட மாட்டேன்.. இது தான் காரணம்..? சினேகா சொன்ன காரணத்தை பாருங்க..

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடலுக்கு அழகான நடனத்தை ஆடி தன்னுடைய சிரிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை சினேகா புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

நடிகை சினேகாவின் இயற்பெயர் சுகாசினி ராஜாராம் நாயுடு. இவர் திரைப்படத்திற்காக தனது பெயரை சினேகா என்று மாற்றிக் கொண்டார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


நடிகை சினேகா..

நடிகை சினேகா 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பச்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து அதே ஆண்டில் தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: அவ ஒரு அரக்கி, ராட்சசி.. பானுப்ரியாவை மேடையில் வெளுத்து வாங்கிய நடிகை சுஹாசினி..!

மேலும் தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் பல்வேறு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.


இவர் நடிப்பில் வெளி வந்த புன்னகை தேசம், உன்னை நினைத்து விரும்புகிறேன் போன்ற படங்களுக்காக விருதினைப் பெற்ற இவர் பார்த்திபன் கனவு படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு தடவை யூஸ் பண்ணா நெக்ஸ்ட் டைம் நோ..

2009-ஆம் ஆண்டு முதல் முறையாக சினேகா பிரசன்னாவுடன் அச்சம் உண்டு அச்சமுண்டு என்ற படத்தில் இணைந்து நடித்த பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை அடுத்து 2011-ஆம் ஆண்டு அவர்களது காதலை உறுதி செய்து திருமணம் செய்து கொண்டார்கள்.

என்றும் எவர்கிரீன் நடிகையாக திகழும் நடிகை சினேகா திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் சின்னத்திரைகளில் நடக்கும் ரியல் ஷோக்கலில் நடுவராக பங்கு பெற்று அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் அண்மையில் கூறிய செய்தியானது அனைவரையும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு காரணம் இவர் பயன்படுத்திய ஆடையை மறு முறை பயன்படுத்த மாட்டேன். ஒரே ஒரு முறை மட்டும் தான் பயன்படுத்துவேன் என்று கூறிய கருத்து பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.


மேலும் ஏற்கனவே உடுத்திய உடையை அணிந்து கொண்டு சென்றதை அடுத்து ஒரு பத்திரிக்கையில் சினேகாவிடம் உடை இல்லையா? இந்த நிகழ்ச்சிக்கும் அந்த உடையிலேயே வந்திருக்கிறீர்களா? என்பது போல கேட்டும் எழுதியும் இருக்கிறார்கள். இது ஒரு விதமான நெருடலை அவரிடம் ஏற்படுத்தி உள்ளது.

காரணம் தெரியுமா?

இப்படி எழுதுவார்கள் என்று சற்றும் எதிர்பார்க்காத அவர் ஒரு முறை பயன்படுத்திய ஆடையை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டார். இந்த காரணத்தால் தான் எங்கே மீண்டும் பத்திரிக்கையாளர்கள் அது போல எழுதுவார்களோ கேட்பார்களோ? என்ற அச்சத்தில் இவர் ஒரு தடவை போட்டதை திரும்பப் போட மாட்டேன். அதற்கு காரணம் இது காரணம் தான் என கூறிய விஷயம் தற்போது வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

மேலும் இப்படி செய்வதால் இவருடைய அலமாரியின் அளவு பெரிதாகிக் கொண்டே போகிறது என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள் உறைந்து விட்டார்கள். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினேகா ஒரு தடவை போட்ட ஆடையை திரும்பப் போடாததற்கான காரணத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர் சொன்னதில் ஒரு உண்மை உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வருகிறார்கள்.