தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. இறக்கும் போது அது இல்லை.. ஸ்ரீவித்யா குறித்து பிரபல நடிகர்..

தகாத உறவு.. அழிந்து போன சொத்து.. இறக்கும் போது அது இல்லை.. ஸ்ரீவித்யா குறித்து பிரபல நடிகர்..

பிரபல குணச்சித்திர நடிகையான ஸ்ரீ வித்யா கர்நாடக இசை பாடகி எம் எஸ் வசந்தகுமாரியின் மகளாக திகழ்கிறார். இவர் 1970 முதல் 2000 வரை பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பல்வேறு விருதுகள் கிடைத்திருந்தாலும் கடைசி காலத்தில் தனது சொத்துக்கள் அனைத்தையும் பறிகொடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

நடிகை ஸ்ரீவித்யா..

நடிகை ஸ்ரீவித்யா 1966 ஆம் ஆண்டு புகழ்பெற்ற தமிழ் நடிகரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து குழந்தை நட்சத்திரமாக திருவருட்செல்வர் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.


இதையும் படிங்க: காம பைத்தியம்.. இரண்டாவது திருமணம் செய்தும் திருந்தல.. நடிகை சரிதாவின் குற்றச்சாட்டு..

இதனை அடுத்து பி. சுப்பிரமணியம் இயக்கிய குமார சம்பவம் படத்தில் நடித்த இவருக்கு தெலுங்கு திரைப்படங்களிலும், மலையாள திரைப்படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்புகளை சிறப்பாக செய்தார்.

--Advertisement--

மேலும் 1970-களில் நடுப்பகுதியில் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகையாக மாறிய இவர் பாலச்சந்தர் இயக்கிய வெள்ளி விழா, சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளி வந்த திரைப்படமான அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற மகாபாரதத்தை தழுவிய திரைக்கதையில் அம்பாவாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்று விட்டார்.

தகாத உறவால் பறி போன சொத்து..

இவர் சிறந்த நடிகை என்பதை ஒரு பக்கம் இருந்தாலும் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் அமரன் என்ற திரைப்படத்திலும் மலையாள படங்களிலும் பாடி இருப்பது பலரது மனதையும் மகிழ்வித்துள்ளது.


இந்நிலையில் இவருக்கு தகாத உறவு ஏற்பட்டதை அடுத்து திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று பிரபல நடிகர் ஒருவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடிகர் கமலஹாசனை காதலித்ததாகவும் குறிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அபூர்வராகங்கள் படத்தின் போது காதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இது சம்பந்தமாக சில விஷயங்கள் இணையத்தில் சமீப காலமாக கசிந்து வந்த நிலையில் தன்னைவிட வயதில் குறைந்த கமலஹாசனை ஒரு தலையாக இவர் காதலித்திருக்கிறார்.

பிரபல நடிகர் பேச்சு..

இதனை அடுத்து அவரது காதல் கை கூடாத நிலையில் மலையாள துணை இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் மண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இவரது கணவரோ இவரை ஒரு ஏடிஎம் மெஷினாக பாவித்து இவர் சம்பாதித்த பணம் அத்தனையும் நாசம் செய்தார்.

ஒரு காலகட்டத்தில் தான் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் பறி கொடுத்து அழிந்து போன நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தனது இறுதி நாட்களை கழித்த நிலையில் இறுதியாக இறந்து போகிறார்.


மேலும் தன்னுடைய தகாத உறவு மற்றும் அழிந்து போன சொத்துக்கள் அனைத்தும் இவருக்கு திரும்ப கிடைக்கவில்லை. அத்துடன் கடைசி நாட்கள் மிகவும் சிரமப்பட்டு தான் உயிர் பிரிந்ததாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஸ்ரீவித்யாவின் கடைசி நிமிடங்கள் பற்றி கூறியிருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒழுக்கம் வாழ்க்கையில் மிக முக்கியம். அது தவறும் போது எல்லாம் தடைப்பட்டுவிடும் என்பதைக்கு உதாரணமாக ஸ்ரீவித்யா இருக்கிறார். இவரை பார்த்தாவது அனைவரும் திருந்த வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: “இது தொடை இல்ல.. வெண்ணை கட்டி கடை..” முழுசாக காட்டி சொக்க வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா…!