10 வருஷமா கூடவே இருக்காரு.. ஆனால்.. பெட்ரூம்ல இதை போட்டதே இல்ல.. ஸ்ருத்திகா கன்றாவி பேச்சு..!

இப்போதெல்லாம் எந்த இடத்தில் எதை பேசுவது, எப்படி பேசுவது, எதற்கான விஷயத்தை பேசுவது என்ற ஒரு அடிப்படை நாகரீகமே இல்லாமல் பலரும் இருந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சினிமா நடிகர் நடிகைகளாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள், பொதுவெளிகளில் பேசும்போது நாகரிகமாகவும், பண்பாடுடனும் பேச வேண்டிய விஷயங்களை மட்டுமே பேச வேண்டும்.
அதுதான் ஒரு அறிவாந்த சிறந்த செயலாக இருக்கும்.

ஆனால் சிலரது பேச்சு, எதிரில் அமர்ந்து கேட்கும் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு மிகவும் தரம் கெட்டதாக, அருவறுப்பான பேச்சாக இருப்பது மிகவும் வருத்தம் தருகிறது.

ஸ்ருத்திகா

நடிகை ஸ்ருத்திகா, இவர் ஸ்ரீ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து நளதமயந்தி, ஆல்பம், சித்திக்குதே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3ல், இவரும் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். இதன் மூலம் மக்கள் மத்தியில், நல்ல பிரபலமும் ஸ்ருத்திகாவுக்கு கிடைத்தது.

--Advertisement--

தேங்காய் சீனிவாசன் பேத்தி

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகராக, நல்ல குணச்சித்திர நடிகராக புகழ் பெற்ற பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது பலரும் அறியாத உண்மை.

ஸ்ருத்திகாவுக்கு திருமணமாகி கணவர், மகன் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில், தனது கணவருடன் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஸ்ருத்திகா, அப்போது அவர் பேசிய விஷயம் அங்கிருந்த தொகுப்பாளர்கள் இருவரையும் முகம் சுளிக்க வைத்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களையும் அடச்சீ என வெறுப்படைய செய்தது.

பொதுவெளியில், பல பேர் பார்க்க கூடிய ஒரு நிகழ்ச்சியில் இப்படியும் கூட பேசலாமா என்று அதிர்ச்சியடைய வைக்கும் நிலையில் அவர் பேசியிருந்தார்.

பாம் போடவில்லை

ஸ்ருத்திகா, தன் கணவரை குறிப்பிட்டுச் சொல்லி பேசுகையில், நானும் இவரும் ஒரே அறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறோம். ஒரே ரூமில் இருந்தும் இவர் ஒரு முறை கூட பாம் போடவில்லை. நான் இவர் ஒரு முறையாவது பாம் போடுவார் என்று எதிர்பார்த்து பலமுறை ஏமாற்றம் தான்.

என் கணவர் ஒரு முறை கூட பாம் போடாமல் இருந்து வருகிறார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒருவரால் பத்து ஆண்டுகளாக பாம் போடாமல் இருக்க முடியும்.

நானும் என் மகன் ஆரவ்வும் அவரிடம் பலமுறை கவனித்து பார்த்துவிட்டோம். ஒரே ஒரு முறை பாம் போடு என்று கெஞ்சி கூட பார்த்து விட்டோம்.

ஒட்டுக் கேட்கிறாயா?

நாங்கள் ஒரு ஹோட்டலுக்கு சென்று இருந்தோம். அப்போது ஹோட்டல் அறையில் இந்த சத்தமும் இல்லை. இவர் டிவியை போட்டுவிட்டு பாத்ரூம் சென்று விட்டார். அவர் இதற்காகத்தான் போகிறார் என்று, டிவியை ஆப் செய்துவிட்டு பின்னாடியே போய் கதவில் காது கொடுத்து கேட்டு பார்த்தோம்.

அப்போதும் அவர், என்ன ஒட்டுக் கேட்கிறாயா என்று என்னை சத்தமிட்டார். அந்த அளவுக்கு இவர் பாம் போடாமல் எனக்கு ஏமாற்றத்தை தந்து கொண்டிருக்கிறார் என்று மிகவும் ஜாலியாக, சந்தோஷமாக அந்த விஷயங்களை பேசினார் ஸ்ருத்திகா.

இப்படி கொச்சையாக ஒரு விஷயத்தை, ஒரு பொதுவெளியில் அதுவும் ஒரு நடிகையாக இருந்து கொண்டு அவர் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

இதெல்லாம் ஒரு பீலிங்கா?

மனைவிக்கு கணவன் மீது என்ன வேண்டுமானாலும் பீலிங் வரலாம். ஆனால் இதெல்லாம் ஒரு பீலிங்கா என்று இதை கேட்பவர்கள் கமெண்டில் கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

10 வருஷமா கூடவே இருக்காரு.. ஆனால்.. பெட்ரூம்ல பாம் போட்டதே இல்ல.. என்ற ஸ்ருத்திகா கன்றாவி பேச்சு பலருக்கும் குமட்டலை வரச் செய்திருக்கிறது.