கல்யாணம் ஆகிட்டா என்ன.. அட்ஜெஸ்ட்மெண்டிற்கு நான் ரெடி.. கோடிகளில் மிதக்கும் ராணி நடிகை..

சினிமாவில் தொடர்ந்து தங்களது மார்க்கெட்டுகளை தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகைகள் பல்வேறு ஜால வித்தைகளை காட்ட வேண்டி இருக்கிறது. நடிகர்கள் போலவே தொடர்ந்து மார்க்கெட் இருக்கும் ஒரு துறையாக நடிகைகளுக்கு சினிமாத்துறை என்றுமே இருந்தது கிடையாது.

எப்போது வேண்டுமானாலும் அவர்களது மார்க்கெட் போகலாம் என்கிற நிலை இருப்பதால் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்களுக்கு ஆதரவாக சில நடிகைகள் இருந்து வருகின்றனர்.

ஆஹா ஓஹோ நடிகை:

ஒரு காலத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓஹோ என்று இருந்த ராணி நடிகை தற்சமயம் மிகவும் தாழ்ந்து வந்து சினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓ.கே கூறி இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த காலகட்டத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டார் இந்த நடிகை.

அதனை தொடர்ந்து அந்த நடிகருக்கும் இவருக்கும் இடையே திருமணமும் நடந்தது. பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கிவிடும்.  அதனாலேயே தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் சிலர் வயது ஆன பிறகும் கூட இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதை பார்க்க முடியும்.

அதனை தொடர்ந்து இந்த நடிகைக்குமே  சினிமாவில் வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதற்கு முன்பு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அதிக வரவேற்பை பெற்று வந்தார்.

---- Advertisement ----

வாய்ப்பு குறைந்தது:

அங்கு அதிக சம்பளம் வாங்கி கல்லாகட்டி கொண்டிருந்த இந்த நடிகைக்கு திடீரென்று இப்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதனால் பெரும் கடன் சுமைக்கு உள்ளானார் நடிகை.

இவ்வளவு நாட்கள் சொகுசாக வாழ்ந்து விட்டு இப்பொழுது பணம் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் அது எப்படி முடியும். அதனால் பல இடங்களில் கடன் வாங்கி கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டார் நடிகை. இப்பொழுது அவருக்கு 10 கோடிக்கு அதிகமாக கடன் நிலுவையில் இருக்கிறதாம்.

வாய்ப்புக்காக செய்த வேலை:

அவர் திருமணம் செய்து கொண்ட நடிகர் தற்சமயம் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டதால் அவருக்கும் பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கவர்ச்சியாக நடித்தாவது கடனை ஈடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார் இந்த ராணி நடிகை.

மேலும் கல்யாணம் ஆகிவிட்டதால்தானே வாய்ப்புகள் குறைய துவங்கின எனவே சம்பளத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளவும் ரெடி என்று கூறி இருக்கிறார் இந்த ராணி நடிகை. இதனை அடுத்து இவருக்கு தெலுங்கில் மூன்று பட வாய்ப்புகள் வரிசையாக கிடைத்திருக்கின்றன.

எப்படியாவது கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக நடிகை இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வரிசை கட்டி இறங்கி இருக்கின்றனர் சினிமா தயாரிப்பாளர்கள்.

---- Advertisement ----