இளையராஜா அந்தப்புறம் அம்பலமானது.. முடிஞ்சா என் மேல கேஸ் போடுங்க.. சாட்டை சுழற்றும் பிரபலம்..!

இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த இசையமைப்பாளராகவும் மிகச்சிறந்த பாடராகவும் காலத்தால் அழியாத இசைஞானி ஆகவும் இருந்து வருகிறார்.

இவருக்கு பல கோடி கணக்கான ரசிகர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். முதன் முதலில் அன்னக்கிளி திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலமாக தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இசைஞானி இளையராஜா:

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , மலையாளம், கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களுக்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசையமைப்பாளராக பார்க்கப்படுகிறார் .

இவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் என்பதற்காக பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

---- Advertisement ----

மிகச் சிறந்த இசையமைப்பாளராக பார்க்கப்படும் இசைஞானி இளையராஜா பெரும் சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

தலைக்கனத்துடன் ஆடும் இளையராஜா:

இவரது பாடலை காதால் கேட்க முடியுமே தவிர இவரது குணத்தையோ இவரது பேச்சையோ கொண்டாடவே முடியாது .

அவ்வளவு மிகவும் மோசமான மனிதர் இளையராஜா…. தான் மட்டும் தான் வாழ வேண்டும் என்ற தலைக்கனம் கொண்டு ஆடுபவர் என இவருடன் பணியாற்றிய பல பேர் வெளிப்படையாக வந்து பேசி இருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் இளையராஜா குறித்து மிகவும் காட்டமாக பேட்டி ஒன்றில் பேசியிருப்பது வைரல் ஆகி வருகிறது.

கோடிகளை குவிக்க கூடிய இளையராஜா நல்ல மனிதரா? இதுதான் என்னுடைய கேள்வி… என கேட்டுள்ளார் பாண்டியன்.

நீ யாருக்கு என்ன உதவி செய்திருக்கிறாய்?

மேலும் பேசிய அவர், உன் ஊரில் இருந்து எத்தனை பேர் பட்டதாரி ஆகியிருக்கிறார்கள்? எத்தனை பேர் வழக்கறிஞராக இருக்கிறார்கள்? படித்த எத்தனை பேர் ஐஏஎஸ் அதிகாரியாகி இருக்கிறார்கள்?

நீ எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கலாம்? முதலில் அதை கூறு… சைதை துரைசாமி எத்தனை பேரை ஐஏஎஸ் ஆக்கிவிட்டிருக்கிறார் தெரியுமா?

உன்னால் ஆக்க முடியாதா? நீ அந்த அளவுக்கு தனக்கு மட்டும் என பார்த்துக் கொள்பவர். இந்த மக்களின் மூலமாக எத்தனை கோடி பணத்தை சம்பாதித்து இருக்கிறாய்?

அந்த மக்களுக்கு நீ திருப்பி நன்றி கடனாக என்ன செய்தாய்? “அப்போ அந்தப்புரம் அசிங்கமானது” நீ பொதுவெளியில் வந்த பிறகு தான் நான் இந்த விமர்சனத்தை வைக்கிறேன்.

யாராக இருந்தாலும் சரி மக்களுக்காக பணியாற்றும் ஒவ்வொரு மனிதனும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும்.

எம்ஜிஆர் இறந்து இத்தனை வருடங்கள் ஆகியும் மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார். ஆனால், நீ உயிரோடு இருக்கும்போதே இவ்வளவு அவப்பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறாய்.

எனவே உன்னுடைய வரலாறு உன்னுடைய வாழ்க்கை எல்லாம் நீ எத்தனை பேரை வாழ்த்தாய் என்பதுதான். எனக்கு கூறினார் .

இளையராஜாவின் அந்தப்புறம் :

உடனடியாக தொகுப்பாளர் இதற்கு மறுப்பு பேச்சு தெரிவித்து வைரமுத்துவை குறித்து பிரபல பாடகி பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

ஆனால், அது போன்ற குற்றச்சாட்டுகள் கூட வைரமுத்து மீது இல்லையே நீங்கள் ஏன் அவரை இவ்வளவு மோசமாக தரம் தாழ்த்தி அந்தரங்கம் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தமிழா தமிழா பாண்டியன். நான் பேசும் கருத்தை இணையதளத்தில் பல பேர் பலவிதமாக கருத்துக்களை தலைப்புகளை வைத்துக்கொண்டு அவர்கள் இஷ்டத்துக்கும். செய்திகளை வெளியிடுகிறார்கள்.

நான் கூறுவது வேறொரு நோக்கத்தில் இருந்தால் அவர்கள் வேறு ஒரு கருத்தை பிரதிபலித்து விடுகிறார்கள் அதற்கு நான் போய் எல்லாருக்கும் விளக்கம் கொடுக்க முடியாது.

நான் பேசும் என்னுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைக்கு மட்டும்தான் நான் பொறுப்பாக முடியும். அதை சித்தரித்து வேறு கோணத்தில் கொண்டு செல்பவர்களுக்கு நான் பொறுப்பாக முடியாது.

வியூவர்ஸ் வரவேண்டும் என்பதற்காக தங்கள் இஷ்டத்துக்கும் நான் பேசுவதை வேறு கோணத்தில் சித்தரித்து விடுகிறார்கள்.

அதற்கெல்லாம் நான் பொறுப்பாளராக முடியாது என  தமிழா பாண்டியன் இளையராஜாவின் அந்தப்புரம் குறித்து பேசி இருக்கிறார்.

---- Advertisement ----