கூவத்தூர் திரிஷா.. 3 கிலோ தங்கம்.. கோடி கோடியாய் பணம்.. அந்த வேலை பார்த்த கருணாஸ்.. சந்தேகம் உடைத்த பிரபலம்..

சேலத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி AV ராஜு அவர்கள் சமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாஜலம் அவர்கள் மீது இருந்த அதிருப்தி காரணமாக சில குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் வைத்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்திருக்கிறார். மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது கிடையாது.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய AV ராஜு கூவத்தூர் ரிசார்ட் தங்கியிருந்தபோது நடிகை திரிஷா தான் வேண்டும் என்று படம் பிடித்து 25 லட்சம் ரூபாய் கொடுத்து அழைத்து வந்தார் வெங்கடாஜாலம் என்று பேசியிருந்தார்.

இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. இதனை தொடர்ந்து நடிகை திரிஷா ஏ வி ராஜு மன்னிப்பு கோற வேண்டும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.

புயலை கிளப்பிய கருணாஸ்

ஆனாலும், இந்த விவகாரம் முடிந்த பாடில்லை. காரணம் இந்த விவகாரத்தில் முக்கியமான ஒரு நபராக பார்க்கப்படுபவர் நடிகர் கருணாஸ். சினிமா நடிகரான இவர் அதிமுகவிலிருந்து விலகிய பொழுது கூவத்தூரில் நடந்த விஷயத்தையெல்லாம் சொல்லட்டுமா..? சொன்னால் மானம் போயிடும் என்று பேசியிருந்தார்.

அப்படி என்ன விஷயம் நடந்தது..? என அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில், AV ராஜூ அவர்களின் இந்த பேச்சு புயலை கிளப்பி இருக்கிறது. கருணாஸ் தான் நடிகை திரிஷாவை அழைத்து வந்தார் என்றும் கூறியிருந்தார் AV ராஜு.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் திரு பாண்டியன் அவர்கள் இந்த விவகாரம் குறித்து தனக்கு தெரிந்த விஷயங்களை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். மட்டுமல்லாமல் இதனை நான் வெளியில் சொல்வதால் என் மீது வழக்கு போடுவார்கள் என்றால் அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

வழக்கே வா.. வழக்கே வா.. என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கூவத்தூருக்கு த்ரிஷா மட்டுமல்ல பல்வேறு நடிகைகள் வந்தது உண்மை.

ஒரு கோடி பணம்.. 3 கிலோ தங்கம்..

அங்க இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் பணம்.. தலா மூன்று கிலோ தங்கம்.. என எடப்பாடி பழனிசாமி அவர்கள் செட்டில் செய்தார். கூவத்தூருக்கு த்ரிஷா வந்த பிறகு அங்கிருந்து இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்களும் திரிஷா தான் வேண்டும் என்று அடம் பிடித்தார்கள்.

அதன் பிறகு திரிஷா மட்டுமில்லாமல் பல்வேறு துறை சினிமா நடிகைகள் கூவத்தூர் ரிசாட்டிற்கு வந்தனர். இவர்களுக்காக லட்சக்கணக்கில் பணம் செட்டில் செய்யப்பட்டது. இவை குறித்த புகைப்பட ஆதாரங்கள், வீடியோ ஆதாரங்கள், ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகும்.

அப்போது நீங்கள் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என பேசி இருக்கிறார். மேலும் இதையெல்லாம் நான் மறுக்க போவது கிடையாது. இதற்காக என் மீது வழக்கு தொடுத்தால் அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் எனவும் பேசி இருக்கிறார் பாண்டியன் அவர்கள். அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் சென்று பார்க்கலாம்.

நன்றி – Channel 5 Tamil

   

--Advertisement--