பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..

பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் ஒரு பழம்பெரும் நடிகர். இவரின் பேத்தி தியாவின் திருமணம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பம் முழுவதுமே சந்தோஷமாக இருந்ததை அண்மையில் வெளி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


ஆனால் இந்த திருமணத்திற்கு விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகளான வனிதா அழைக்கப்படாமல் தனித்து விடப்பட்டு இருந்தது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி நினைத்தாலும் வனிதாவுடன் சேர முடியாது என்ற கருத்துக்கள் வழுத்து வருகிறது.

இதையும் படிங்க: சித்தார்த் செய்த தரமான சம்பவம் – கோடி ரூபா கொடுத்தும் வேலைக்கு ஆகல..

வனிதா விஜயகுமார்..

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளாகிய வனிதா விஜயகுமார் தற்போது தன் தந்தையோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து தன் மகளோடு பிரிந்து வாழ்கிறார். ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து ஆன நிலையில் தன் பெண்ணோடு இணைந்து வாழ்ந்து வரும் இவர் பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டதை அடுத்து youtube சேனல்களில் பல ரிவ்யூக்களை செய்து வருகிறார்.


அந்த வகையில் இவர் இவரது குடும்பத்தார் பற்றி பல விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பிரீத்தாவின் கணவர் ஹரியை பற்றி தாறுமாறாக பேசிய விவரங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

--Advertisement--

விஜயகுமாரின் மூத்த மனைவியான முத்துக்கண்ணுவின் மகளாகிய அனிதா விஜயகுமார் மற்றும் கவிதா விஜயகுமார் அருண் விஜய் இவர்கள் மூவரும் வனிதாவோடு சேராமல் தனித்து இருப்பது ஒரு பக்கம் நியாயம் என்றாலும் மஞ்சுளாவின் மற்ற இரு மகள்களான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஏன் வனிதாவுடன் சேர முடியாது.

ப்ரீத்தா.. ஸ்ரீதேவி..

தனது சொந்த சகோதரிகளான ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி வனிதாவை விட்டு விட்டு தியாவின் கல்யாணத்தில் கூட்டமாக அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடிய நிகழ்வினை யாரும் மறந்து விட முடியாது.

அந்த சமயத்தில் கூட நடிகை வனிதா இணையதள பக்கத்தில் சிங்கம் சிங்கிளாக இருப்பது போல் உன் ஒரு வீடியோவை வெளியிட்டு பலரும் அங்கு கூடி இருக்க நான் இங்கு தனியே இருக்கிறேன் என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருந்தார்.

வனிதா உடன் சேர முடியாது..

மேலும் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி நினைத்தாலும் வனிதாவுடன் சேர முடியாததற்கு காரணம் வனிதாவை வீட்டுக்கு அழைத்து விட்டால் அவர் பேசிய பேச்சு எல்லாம் உண்மை ஆகிவிடும் என்பதாலும் அவர்களுக்குள் இருக்கக்கூடிய அந்த மன கசப்பு இன்று வரை நீங்க வில்லை என்பதாலும் தனது இரண்டு சகோதரிகளும் தனது சகோதரியோடு கட்டாயம் சேர மாட்டார்கள் என்ற கருத்து தற்போது வழுத்து வருகிறது.


இதையும் படிங்க: அது எடுப்பா தெரியனும்.. அஞ்சே நிமிஷத்துல ரெடி.. வரம்பு மீறும் நடிகைகள்.. கொடும காலம்டா சாமி…

எனினும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வனிதா விஜயகுமார் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வருவதை அடுத்து அனைவரும் அவரது துணிச்சலை பாராட்டி இருக்கிறார்கள்.

மேலும் இனி வரும் காலங்களில் இவர்கள் சேருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்று ரசிகர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.