3 கோடி சம்பளத்தை வாங்கி விட்டு 7 கோடி என வதந்தி பரப்பி சிக்கிய வாரிசு நடிகை..!


பாலிவுட் சினிமாவில் குறுகிய காலத்தில் தொடர் வெற்றிப்படங்ககளில் நடித்து முன்னணி நடிகைகளுக்கு இணையாக கிடு கிடுவென உயர்ந்து தனது மார்க்கெட் மவுஸை வெகு விரைவில் உயர்திக்கொண்டவர் நடிகை ஷ்ரத்தா கபூர். 

இவர் பிரபல ஹிந்தி நடிகர் ஷக்தி கபூரின் மகள் ஆவார். இந்நிலையில், இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள சாஹோ படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 


இப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள ஷ்ரத்தா தனது முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்றுள்ளார் எந்த தகவல் பரவியது. ஆனால், இது முற்றிலும் பொய்யானது என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


இந்த படத்தில் முதலில், பாலிவுட் நடிகர் காத்ரீனா கைஃப்-பை தான் ஒப்பந்தம் செய்தார்கள் என்றும் ஆனால், அவர் 5 கோடி சம்பளம் கேட்டதால் கொடுக்க மறுத்துவிட்டு ஷ்ரத்தா கபூரை புக் செய்தார்கள். 

காத்ரீனா-வுக்கே 5 கோடி கொடுக்க மறுத்த படக்குழு இவருக்கு எப்படி 7 கோடி கொடுத்திருப்பார்கள். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்குவதற்கு நடிகை ஷ்ரத்தா கபூர் இப்படியான போலியான தகவலை பரப்பி வருகிறார் என்று கூறுகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--