போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கைப் பணிகள் முடிந்து, தற்போது க்யூபுக்கு அனுப்பப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆகஸ்ட் 8-ம் தேதி நெருங்கும் வேளையில் யாருக்கு தமிழக விநியோக உரிமை என்பதில் குழப்பம் நீடித்தது. முன்னணி நிறுவனங்கள் பலரும் போட்டியிட்ட போது, போனி கபூர் சொன்ன விலையை இந்தப் படம் வசூல் செய்யுமா என்று தயக்கம் காட்டினார்கள்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இடையே ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இறுதியில் மூன்று பிரபல நிறுவனங்கள் சேர்ந்து உரிமையை வாங்கியிருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை பகுதியின் ரிலீஸ் உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் சேலம், திருச்சி பகுதிகளின் உரிமையையும் அவர் வாங்கியுள்ளார்.
#RedGiantMovies will be releasing #ThalaAjith s #NerKondaPaarvaiFromAug8 in Chennai city, Trichy and Salem areas. pic.twitter.com/BD7hnGmOAg— Udhay (@Udhaystalin) August 2, 2019
Tags
Nerkonda Paarvai