"உன் பேர் சொல்ல ஆசைதான்" - மோனிகா கேஸ்டலினோ - என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்..? பாருங்க..!


கே.எஸ்.ரவிகுமாா் அவா்கள் தளபதி விஜய் அவா்களுடன் கைகோா்த்த முதல் திரைப்படம் மின்சார கண்ணா. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை இதுவே இவர்கள் கூட்டணியின் கடைசி படமுமாக அமைந்து விட்டது. 

சரி வாங்க மேட்டருக்கு போலாம். இந்த படத்தில் தளபதி விஜய் அவா்களுக்கு ஜோடியாக நடிக்க இயக்குநா் கே.எஸ்.ரவிகுமார் முதலில் அணுகியது நடிகை சிம்ரனை தான்.

ஆனால், இப்படத்தில் நடிகை குஷ்புவிற்கு உள்ள முக்கியத்துவம் எனக்கு இல்லை அதனால் ப்ளீஸ் சார் என்று கூறி மறுத்து விட்டதாக கேள்வி. பின்னா் இந்த ஹீரோயின் கதாபாத்திரம் போஜ்புரி மொழி நடிகையான மோனிகா கேஸ்டலினோ என்ற புதுமுத்திற்கு கிடைத்தது. 


பக்கத்துக்கு வீட்டு பெண் போல கலையாக இருந்தார் மோனிகா. ஒரு பாடலில் பிரம்மனை கஞ்சன் என்றும் வள்ளல் என்றும் பொத்தாம் பொதுவாக வர்ணித்திருப்பார் கவிஞர் வைரமுத்து. 


ஆனால், நம்ம கவிஞர் நா.முத்துக்குமார் கஞ்சனும் இல்லை, வள்ளலும் இல்லை என வைரமுத்துவின் வரிகளுக்கு பளார் விடும் படி “பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னைப் படைத்ததாலே” என்ற வரிகளை படத்தின் நாயகியை நோக்கி எழுதினார். அந்த நாயகி மோனிகா ஆகிவிட்டார். 

இந்த பாடலின் வார்த்தைகளின் பொருளுக்குத் தகுந்தாற்போல குரலை ஏற்றியும், இறக்கியும் பாடி உள்ளிருக்கும் மனதின் ஓட்டத்தை கையில் எடுத்து தந்தார் ஹரிஹரன்.பாடல் வரிகள் எழுதுவது ஒருவர்.. ஆனால், அதனை இப்படிதான் பாட வேண்டும் என்று பாடி கேட்பவர்களின் மனதை ஆனந்தத்தில் ஆழ்த்துபவர் ஹரிஹரன் அவர்கள். 

இந்த பாடல் இன்றளவும் இளசுகள் மத்தியில் காதல் கீதமாக ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பாடலுக்கு ஒளி கொடுத்த மோனிகா கேஸ்டலினோ என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது..!

எங்கங்க.. நம்ம வேலையை செய்யுறதுக்கே நேரம் போதவில்லை. இதில், இவர்களை பற்றியெல்லாம் படிக்க எங்கே நேரம் கிடைக்கிறது என்று நீங்கள் சொல்வது புரிகிறது. 

அதனால் தான் சினிமாவில் தோன்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி திடீரெனே காணமால் போனவர்களை பற்றி நம் தளத்தில் அவ்வப்போது எழுதி வருகிறோம். அந்த வகையில் இன்று, நடிகை மோனிகா கேஸ்டலினோவை பற்றி பார்க்கலாமா..?

மின்சாரக்கண்ணா தான் இவரது முதல் தமிழ்ப்படம். சோகம் என்னவென்றால், மின்சாரக்கண்ணா தான் இவரது கடைசி தமிழ்ப்படமும் இது தான்.


மின்சாரக்கண்ணா படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு "Dekh Bhai Dekh" என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். அவ்வளவு தான் அவரது சினிமா வாழ்கை. மின்சாரக்கண்ணா உட்பட மொத்தமே 9 படங்கள் தான் நடித்துள்ளார்.


ஆனால், தொலைக்காட்சி சீரியல்களில் அம்மணி தான் நம்பர் 1. மாராதியில் ஒளிபரப்பான 15-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் மோனிகா. இப்போது, கூட சில சீரியல்களில் நடித்து வருகிறார்.


மேலும், ஹிந்தியில் காமசுந்தரி என்ற ஒரு படத்தில் படு மோசமான கவர்ச்சி காட்டி நடித்தார். தொடர்ந்து, 2004-ம் ஆண்டு வெளியான "Men Not Allowed" என்ற படத்தில் ஓரினச்சேர்கையாளராக நடித்தார். இதனால், இவர் மீது ஐட்டம் நடிகை என்ற தவறான பிம்பம் பதிந்தது. இதனால் தொடர்ந்து சினிமா வாய்ப்பின்றி இருந்த இவர் தொலைகாட்சி பக்கம் வண்டியை திருப்பி இப்போது ஸ்மூத்தாக ஒட்டிக்கொண்டிருக்கிறார்.


அப்புறம், இன்னொரு விஷயம் இவருக்கு ஒரு திருமணம் ஆகி விட்டது. கடந்த 2010-ம் ஆண்டு சத்யபிரகாஷ் என்ற உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட 8 மாதத்தில் விவாகரத்தும் பெற்றுக்கொண்டார். இப்பொது, தனது குடும்பத்துடன் தான் வசித்து வருகிறார்.
Previous Post Next Post
--Advertisement--