தமிழ் சினிமாவில் உதயமான ஒரு சூப்பர் ஸ்டார். இன்று வரை சூப்பர் ஸ்டாராவே இருக்கிறார். இப்போது, முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து வரும் ரஜினியின் ஜாதகம் அரசியலில் நுழைந்தாக வேண்டும், முதலமைச்சர் ஆகியே ஆக வேண்டும் என்று சொல்கிறது.
அதற்க்கான, சரியான தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ரஜினி.2021-ல் நிச்சயம் ரஜினி களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். அதே வேளையில் அவரின் சில கருத்துக்கள் சர்ச்சையில் சிக்கின.
இதில் தூத்துக்குடி துப்பாக்கி தாக்குதல் சம்பவமும் ஒன்று. தூத்துக்குடி போராட்டத்தில் தீய சக்திகள் உள்ளே நுழைந்தன. அதனால் தான் துப்பாக்கி சூடு நடந்த வேண்டிய சூழல் உருவானது என கூறினார்.
இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, " நான் அன்றும் இன்றும் ரஜினியின் ரசிகன் தான். அவருடன் படத்திலும் நடித்துள்ளேன். தூத்துக்குடி சம்பவத்தில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என ரஜினி சொன்னாரே? அவரை நிரூபிக்க சொல்லுங்கள் நான் என் தலையை மொட்டை அடித்துக்கொள்கிறேன்.
வெட்கமா இல்ல, உங்கள் காசு தமிழ் மண்ணில் இருந்து மக்கள் கொடுத்த காசு, தொழிலாளித்துவம் தான் ஜெயிக்கும், முதலாளித்துவம் ஒருபோதும் ஜெயிக்காது. படத்திலும் அப்படித்தான் என கூறியுள்ளார்.