நடிகர் விஜய் சமீபகாலமாக தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை தனது அரசியல் கருத்துகளை கூறவும் பயன்படுத்திக்கொள்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .
வரும் காலத்தில் நிச்சயம் விஜய்யின் அரசியல் பிரவேஷம் இருக்கும் என்பது ரசிகர்களின் கணிப்பு. ஆனால், நடிகர் விஜய் கருத்து கூறுகிறேன் பேர்வழி என்ற பெயரில் மேடைகளில் காட்டாற்று வெள்ளமாக பேசி தீர்த்து விடுகிறார்.
சமீபத்தில், நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் யாரை எங்கு உக்கார வைக்கனுமோ..? அங்க உக்கார வைக்கணும்..! என்று வீர வசனம் பேசியிருந்தார்.
இது, தமிழக முதலவர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களை தாக்குவது போல உள்ளது என பலரும் கூறி வந்த நிலையில், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் சிலர் விஜய்யின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறி வருகிறார்கள்.
படத்துல அஞ்சு ரூபாய்க்கு மருத்துவம் பாக்க சொல்லுவாரு, தன் படத்தோட இசை வெளியீட்டு விழா நிகழ்சிகான டிக்கெட்டை தன்னுடைய ரசிகர்களுக்கே 2500 ரூபாய்க்கு விற்பனை செய்வார் என்று பலரும் கிண்டலடித்து பேசி வருகிறார்கள். நிலைமை இப்படி இருக்க அவர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று கூறி வருகிறார்கள்.
இன்னும் சிலர், நடிகர் விஜய் திமுக-வின் ஊதுகுழாயாக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இப்படியான பேச்சுகள் விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி வருகின்றது. மேலும், தலைவா படத்தின் போது " மிரட்டுகிறார்கள், ஆடிப்போய் கிடக்கிறேன்" என்று பதறிபோய் வீடியோ வெளியிட்டு அரசிடம் வேண்டுகோள் வைத்த விஜய்.
பதுங்கி பயந்த விஜய் இப்போது ஜெயலலிதா மறைந்த பிறகு அரசியல் வீரரைப்போல பேசி வருவதாகவும் அரசுக்கு எதிராக சர்கார் படத்தில் விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சி மற்றும் பொதுவெளியில் இசை வெளியீட்டு விழா என்ற பெயரில் தமிழக அரசை மறைமுகமாக எதிர்க்கும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் எனவும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
Miss u Amma.....இந்த நேரத்தில் மறைந்த முதல்வர் அம்மா அவர்களை நினைவுகூர்வோம்... யாரை எங்க எப்படி வைக்க வேண்டும் என்று சரியாக வைத்திருந்தார் அம்மா அவர்கள். அந்த வரிசையில் ஜோசப் விஜயை கதறவிட்ட அம்மா....— K.K (@kk_madurai) September 20, 2019
அந்த ஒத்த உசுரு இருக்கும் வரை நீங்க எங்கடா இருந்திங்க.#அய்யோஅம்மாஆடியோலான்ச் pic.twitter.com/ioNnnOfh97
Tags
Actor Vijay