தோழியிடம் வித்தியாசமான முறையில் காதலை கூறிய நபர் - உலக காதலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய முடிவு..!


அமெரிக்காவை  சேர்ந்த இளைஞர் ஸ்டீவன் வெபர். இவரது, தோழி கெனிஷா ஆன்டோயினி. இவர்கள் இருவரும் "பெம்பா" என்ற தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 


அந்த தீவில் கடலில் நீருக்கு அடியில் 32 அடி ஆழத்தில் "தி மாண்டா ரெசார்ட்" எனப்படும் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் அடித்தளம் கடினமான கண்ணாடிகளால் கடலின் அழகை உள்ளிருந்து ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.   

அந்த விடுதியில் அறை எடுத்து வெபரும், கெனிஷாவும் தங்கினார்கள். அப்போது ஸ்டீவன் வெபர், தனது தோழி கெனிஷா ஆன்டோயினியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதை வித்தியாசமான முறையில் கேட்க திட்டமிட்டுள்ளார். 

தண்ணீருக்குள் இறங்கி கண்ணாடி வழியே அறைக்குள் இருக்கும் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்த ஸ்டீவன் வெபர் முடிவு செய்தார். அதன் படி, தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்தையும், திருமணதிற்காக வாங்கி வைத்திருந்த மோதிரத்தையும் கண்ணாடி வழியாக விடுதிக்குள் இருந்த தனது காதலியிடம் காட்டினார். 


அந்த கடிதத்தில் அவர் “உன்னைப் பற்றி நான் விரும்பும் அனைத்தையும் உன்னிடம் சொல்லும் அளவுக்கு என்னால் மூச்சு விட முடியாது. ஆனால் நான் உன்னைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஒவ்வொரு நாளும் நான் அதிகமாக நேசிக்கிறேன்” என எழுதியிருந்தார். 

தனக்காக தண்ணீருக்கு அடியில் நண்பர் வெபர் செய்யும் கவித்துவ செயல்களை கெனிஷா ஆன்டோயினி உணர்ச்சி பெருக்குடனும், ஆனந்த கண்ணீருடனும் காதலை ஏற்றுக்கொண்டேன் என்று செய்கை மூலம் அறிவித்தார்.


ஆனால், அவர் காதலை ஒப்புக்கொண்ட அடுத்த சில நிமிடங்களில் சற்றும் எதிர்பாராதவிதமாக ஸ்டீவன் வெபர் தண்ணீரில் மூழ்கினார். விடுதி ஊழியர்கள் அவரை காப்பாற்றுவதற்காக உடனடியாக தண்ணீருக்குள் இறங்கினர். 

ஆனால் அதற்குள் ஸ்டீவன் வெபர் மூச்சு திணறி இறந்துவிட்டார். இந்த தகவலை புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் பதிவிட்ட கெனிஷா ஆன்டோயினி தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த உலக காதலர்கள் மனதில் ஒரு வித பாரம் ஏற்படும் என்பது மட்டும் உண்மை. 

நமக்கானவரை மனதார நேசிப்போம், காதலிப்போம், ஒவ்வொரு நாளும்..!
Previous Post Next Post
--Advertisement--