மார்பகம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்..!


சென்னை விமான நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைத்திருந்த "மார்பக புற்று நோய் விழிப்புணர்வு" விழாவில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். மார்பகங்களில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்பட்டால் உடனடியாக தனது சகோதர்கள் மற்றும் பெற்றோர்களிடம் அது குறித்து பேசி தீர்வு காண வேண்டும்.

புற்று நோய் என்பது முற்றிலும் குணப்படுத்த கூடியநோய் தான். பெண்கள் தனது மார்பக நோய்கள் குறித்து பேச கூச்சப்படுதல் கூடாது. அது உடலின் ஒரு பாகம் அவ்வளவு தான். அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கூச்சப்படாமல் தாய், மற்றும் சகோதரியிடம் வெளிப்படையாக பேச வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

மார்பகம் என்றாலே அதை பற்றி பேச கூடாது என்ற மன நிலையுடன் நாம் இருந்து வந்துள்ளோம். ஆண்களுக்கு எப்படி உடலில் சில விஷயங்கள் இருக்கிறதோ, அதேப்போல் பெண்களுக்கு மார்பகம் என்பது ஓர் அங்கம் தான் என்றார்.