திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான்.
80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன.
குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டதாக தெரிவித்ததாக நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்நிலையில், குழந்தை சுஜித்தின் உடல் ஆழ்துளை கிணற்றிலிருந்தே மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. சுஜித்தின் உடலை வீரர்கள் மிகவும் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர், ஆம்புலன்ஸ் மூலமாக உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சிகள் இதோ,
Tags
Sujith Wilson