ஒரு காலை கீழும் ஒரு காலை மேஜையின் மீதும் தூக்கி வைத்து போஸ் கொடுத்துள்ள நந்திதா..! - தேனை விட இனிப்பானதாம்..!


நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார். 

பின்பு முண்டாசுபட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின்கவனம் தன் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.

அந்த வகையில் தற்போது, நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு காலை மேஜையின் மீது தூக்கி வைத்துக்கொண்டு "தேனை விட இனிப்பானது.." என்று கூறி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.