சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விமர்சனங்களையும் பெற்றது.
ஐபோனில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்தின் ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக வெளியிட்டிருந்ததனர். வீட்டில் இருந்தபடி எடுத்த இந்த குறும்படத்தின் பொருட்செலவு குறித்து இயக்குநர் கௌதம் மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஐபோனில் குறும்படம் எடுப்பதற்காக Rig ஒன்று வாங்குனேன். எனக்காகவும், நான் கேட்டதற்காகவும் மட்டுமே சிம்பு மற்றும் திரிஷா இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டனர்.
மேலும் என்னிடம் உங்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று அவர்களிடம் கூறிய போது, சிறுபிள்ளை தனமாக பேசாதீர்கள், இந்த குறும்படத்தை எடுப்போம் என்று முன் வந்தார்கள். இதற்கு இசையமைத்த ஏ. ஆர். ரஹ்மான் வெளியிலிருந்து இசை கலைஞர்களை வைத்து வாசிக்க வைத்தார்.
மேலும் சோனியா மியூசிக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இசையை பயன்படுத்தினோம். மேலும் இதனை என்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளதால் அதில் வரும் பணத்தை அனைவருக்கும் சரிசமமாக பிரித்து கொடுப்பேன் என்றும், இதுவரை இந்த குறும்படத்திற்காக செலவழிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், இது கள்ள காதல் என்றும் திருமணமான ஒரு பெண்ணிடம் இப்படி பேசுவதெல்லாம் முறை கிடையாது என்று கருத்து கூறி வந்தார்கள். அதே சமயம், இந்த படத்திற்கு ஆதரவாக கமெண்ட்களையும் பார்க்க முடிகின்றது.
இந்நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயம் எடுக்க இருப்பதாக இயக்குனர் கௌவுதம் மேனன் கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மூன்று நிமிட குறும்படத்திலேயே இம்புட்டு கண்றாவி. இதில் முழு படம் வேறா..? என்று திகிலில் உள்ளனர்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ''வெற்றிப் பெற்ற படத்தின் தொடர்ச்சியை எடுக்கும் போது, பல தடைகளை தயாரிப்பாளர் சந்திக்க வேண்டியிருக்கும். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-ம் பாகத்திற்க்கான வடிவத்தை கொடுத்து வருகிறேன். நிச்சயம் படம் உருவாகும்,'' என்றார்.


