உச்ச கட்ட கவர்ச்சி காட்சி - சிவகார்த்திகேயன் "அயலான்" படக்குழுவிற்கு அதிரடி கண்டிஷன் போட்ட நடிகை..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார்.

கடைசியாக இவர் நடித்த 'என்.ஜி.கே' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் என்றாலே அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள்.

திருமணம் என்ற பேச்சு எடுத்தாலே அதற்கான பதில் அவர்களுக்கே தெரியாதது போல் பதில் சொல்லுவார்கள். ஆனால் நடிகையின் பெற்றோர்கள் மற்ற பெண்களை போல் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுவார்கள்.

மார்க்கெட் குறைந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு நடிகைகள் திருமணத்தை தள்ளி போடுவார்கள் இது வழக்கமாக நடப்பது தான். அதே போல, தனக்கு பல பணக்கார வரன்கள் வந்தும் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்து விட்டார் ராகுல் பரீத் சிங்.

தொடர்ந்து படங்களில் நடித்து வங்கி இருப்பை உயர்த்தும் வேலையில் இறங்கியுள்ளார் அம்மணி. தற்போது, தமிழில் அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மழையில் நனைந்தபடி கவர்ச்சி ஆட்டம் போடும் சில நிமிட காட்சிகளில் நடிக்க கறார் கண்டிஷன் போட்டுள்ளார் அம்மணி.

இந்த காட்சி படம்மக்கப்படும்போது படப்பிடிப்பிற்கு தேவையான இயக்குனர், கேமராமேன், ஹீரோ தவிர ஆட்கள் வேறு யாரும் செட்டில் இருக்க கூடாது என கூறியுள்ளாராம்.
------Advertisement------
------Advertisement------