மாணவனுக்கு பீர் கொடுத்து தனியாக அழைத்து சென்ற 32 வயது ஆசிரியை.. அரங்கேறிய காது கூசும் கொடூரம்..

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் நடந்த சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

32 வயதான ஆசிரியை நீஹா சர்மா தனது வீட்டில் நடத்திய டியூஷனுக்கு வந்த 19 வயது கல்லூரி முதலாமாண்டு மாணவன் ஆதித்யா குப்தா சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

நீஹா சர்மா போபால் நகரின் ஒரு குடியிருப்புப் பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். வீட்டிலேயே சில மாணவர்களுக்கு டியூஷனும் நடத்தி வந்தார். 

ஆதித்யா குப்தாவும் அவரது வீட்டிற்கு டியூஷன் படிக்க வருபவர்களில் ஒருவர். இவர் நீஹாவின் கணவர் ராஜேஷ் சர்மாவின் நெருங்கிய நண்பர் வினோத் குப்தாவின் மகன். இரு குடும்பங்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது.

ஒருநாள் நீஹா சர்மா தனது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடப் போவதாகக் கூறி ஆதித்யாவை வீட்டிற்கு அழைத்தார். “நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம்” என்று ஆசை வார்த்தைகள் கூறி அவரை உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டில் அவருக்கு பீர் கொடுத்தார். பின்னர் அவரை தனது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மற்றொரு நபர் அமித் யாதவ் இருந்தார். சிறிது நேரத்திலேயே ஆதித்யா மயங்கி விழுந்ததாக நீஹா ஆம்புலன்ஸை அழைத்தார். அடுத்த சில நிமிடங்களில் மாணவனின் பெற்றோருக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஆதித்யா ஏற்கனவே உயிரிழந்திருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆதித்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போபால் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. ஆசிரியை வீட்டின் அருகில் இருந்த ஒரு கடையின் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அந்தக் காட்சிகளில் ஒரு முக்கியமான தகவல் பதிவாகியிருந்தது. மாணவன் மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே ஒரு நபர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த நபர்தான் அமித் யாதவ்.

காவல்துறை அமித் யாதவை கைது செய்து விசாரணை நடத்தியது. அப்போதுதான் முழு உண்மையும் வெளிப்பட்டது. நீஹா சர்மாவுக்கும் அமித் யாதவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. சில தினங்களுக்கு முன்பு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கும் ட்யூசன் நேரத்திற்கு முன்பே அங்கு வந்த ஆதித்யா அதைப் பார்த்துவிட்டதால் அந்த விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் இருவரும் இணைந்து செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

மாணவன் உயிரிழந்த சூழ்நிலை இயற்கையானது அல்ல என்பதும், அதற்குப் பின்னால் திட்டமிடப்பட்ட செயல் இருந்தது என்பதும் காவல்துறைக்கு உறுதியானது. நீஹா சர்மா மற்றும் அமித் யாதவ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


போபால் காவல்துறை இந்த வழக்கை மிகவும் தீவிரமாகக் கையாண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. மாணவனின் குடும்பத்தினர் நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Summary in English : In Bhopal, a 32-year-old teacher invited a 19-year-old first-year college student from her tuition classes to her birthday gathering. She offered him beer and took him inside where another man was present. 
------Advertisement------
------Advertisement------