"உனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமாடானு கேப்பாங்க..." மனவலியுடன் போட்டி கொடுத்த நடிகர் கிங் காங்!!


பிரபல நகைச்சுவை நடிகர் கிங் காங், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 1990 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான "அதிசய பிரவி" என்ற படத்தில் நடித்து பிரபலமானார். கிங் காங் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் பல படங்களிலும் நடித்துள்ளார்.
 
இவர் வடிவேலுவுடன் நடித்த படங்கள் மற்றும் அதில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் அனைத்தும் பெரிய வெற்றி பெற்றன. இந்நிலையில், நடிகர் கிங்காங் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்றது குறித்து சமீபத்தில் யூட்யூப் வீடியோ ஒன்றில் பேட்டியளித்தார். 
 
தான் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற வேண்டும் என முயற்சி செய்தேன். ஆனால், தற்பொழுது வரை வாழ்த்து பெற முடியவில்லை என்ற வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். சமூக வலைதளத்தில் இந்தப் பதிவை பெருமளவில் ரஜினி ரசிகர்கள் பகிர்ந்தனர். 
 
சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கிங்காங் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "பத்து வருஷத்துக்கு முன்னாடி உங்களை பாத்தாது. ஆனால் இந்த இன்ஃபர்மேஷன் எனக்கு வந்து சேரல ரியலி ஐ அம் சாரி.. மன்னிச்சுடுங்க" எனக் கூறியுள்ளார். 
 
இந்த நிலையில் தற்போது மனைவி குழந்தைகள் என வாழ்ந்து வரும் நடிகர் கிங் காங், ஒரு பேட்டியில் ஒரு காலத்தில் பார்க்கும் போது உனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமானு கேப்பாங்க.. சிலர் காமெடியா கேப்பாங்க... சிலர் சீரியசாவும் கேப்பாங்க.. என்று மனதுருகி பேசி உள்ளார்.
 
மேலும், என்னுடைய திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற போது பெண்ணிடம் பல முறை என்னை நிஜமாகவே பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். திருமண பத்திரிக்கை அடித்த பின்பு கூட மீண்டும் நிஜமாவே என்னை பிடிச்சிருக்கா என்று கேட்டேன். என்னை பிடித்திருக்கிறது என்று என்னை திருமணம் செய்து கொண்டார்.
 
என்னுடைய திரும்னதிர்கெல்லாம் ஒரு 300 பேர் வருவார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால், 3000 பேருக்கு மேல் வந்தார்கள். ராதாரவி, மன்சூர்அலிகான் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வந்து வாழ்த்தினார்கள் என்று கூறியுள்ளார் கிங்-காங்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--