பொதுவாக சீரியல்களில் என்றாலே இழுவை என்று ஒரு கருத்து உண்டு. அதற்கு பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தியது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியல் தான். மற்ற சீரியல்கள் கூட 2, 3 வருடங்கள் ஓட்டி அதை முடித்து விடுவார்கள்.
ஆனால் சந்திரலேகா தொடர் ஐந்து வருடங்களை தாண்டி ஆறாவது வருடம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் ஆரம்பத்தில் நடிக்க வந்தவர்கள் தற்போது உடல் எடை கூடி கூடியிருக்கும் அளவிற்கு சீரியலை இழு இழு வென இழுக்கிறார்கள்.
கதை என்று ஆரம்பித்து தற்போது எங்கே பயணிக்கிறது என்பது இயக்குனருக்கே தெரியாது போலிருக்கிறது. அந்த அளவு மக்கள் அதை பார்த்து சலிப்பு அடைந்து விட்டார்கள்.
அதில் ஆரம்பத்தில் லேகாவாக நடித்த நாகஸ்ரீ தமிழ் பொண்ணு இல்லை. பெங்களூர் தான் அவரது சொந்த ஊர். நாடகத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்தாலும் சமூக வலைதளங்களில் பிச்சு உதறுகிறார்.
வித விதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதை பார்த்த ரசிகர்கள், “ உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணெய்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்
0 கருத்துகள்