நடிகை பிரியாமணி உடல் எடையை குறைத்து, இளம் நடிகைகளுக்கே சவால் விடும் விதமாக குட்டை உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பாராக்ப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் கியூட் ஏஞ்சலாக... "கண்களால் கைது செய்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. முதல் படத்தில் அழகிய பொம்மை போல் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
முத்தழகி, என்கிற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தது இவரது எதார்த்தமான நடிப்பு. எனவே இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. மீண்டும் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியான பிரியாமணி சரியான கதையை தேர்வு செய்து நடிக்காததால்... மீண்டும் திரையுலகில் சரிவை சந்தித்தார்.
ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போக, முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது சில படங்களில் தலை காட்டி வந்தாலும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.
நீண்ட இடைவெளிக்கு பின், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான அசுரன் பட ரீமேக், இவருக்கு சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள். இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.
எனவே மீண்டும் விதவிதமாக புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளம் ரசிகர்களை இம்சித்து வருகிறார். அந்த வகையில், இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக... முட்டி தெரிய குட்டை உடை கவர்ச்சியில் தெறிக்கவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனசிட்டோம்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.