ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் ராஷ்மிகா மந்தனா! கசிந்த புகைப்படங்கள்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் உறவு குறித்த வதந்திகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சமீபத்தில், ஒரு ரசிகர் பக்கத்தில் வெளியான விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று, இவர்களது உறவு குறித்த ஊகங்களை மீண்டும் தூண்டியுள்ளது.

இந்த புகைப்படம், இவர்கள் இருவரும் ஒரு தனிப்பட்ட பயணத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா சாதாரண உடையில் (ஷார்ட்ஸ் மற்றும் ஷர்ட்) செல்போனில் மூழ்கியிருக்க, விஜய் தேவரகொண்டா அவருக்கு முன்னால் விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நிற்கிறார்.

பின்னணியில் விஜய்யின் தந்தை கோவர்தன் இருப்பதும் காணப்படுகிறது. இந்த நெருக்கமான, ஆனால் எளிமையான தருணம், சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. 

சமீபத்தில் Filmfare இதழுக்கு அளித்த பேட்டியில், விஜய் தேவரகொண்டா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசினார். தனது வாழ்க்கைத் துணையாக எப்படிப்பட்ட பெண்ணை எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நல்ல எண்ணம் கொண்ட எந்த நல்ல பெண்ணும் போதுமானவர்” என்று பதிலளித்தார்.

ராஷ்மிகா பற்றி பேசும்போது, “நாங்கள் சமீப காலமாக தொடர்பில் இல்லை” என்று கூறினாலும், உடனடியாக “ராஷ்மிகா ஒரு சிறந்த நடிகை மற்றும் அழகான பெண்” என்று புகழ்ந்தார். இந்த பதில்கள், ரசிகர்களிடையே அவர்களது உறவு குறித்து மேலும் ஆரூபங்களை ஏற்படுத்தியுள்ளன.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.