இந்த கொடுமையை எங்க கண்ணால பாக்கணுமா..? நக்மா முடிவால் மூக்கை சிந்தும் ரசிகர்கள்..!

சென்னை: 90களில் தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்த நடிகை நக்மா, தற்போது திருமணமாகாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

அவரது காதல் கிசுகிசுக்கள், குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியுடன் இணைக்கப்பட்ட வதந்திகள், ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டன.

இருப்பினும், இந்த காதல் முடிவுக்கு வந்த பிறகு, நக்மா திருமணம் செய்யாமல், தனது வாழ்க்கையை அரசியல் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்தார்.

1994ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமான நக்மா, தனது முதல் படத்திலேயே பிலிம்ஃபேர் விருதை வென்று, தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தார்.

‘பாட்ஷா’ படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து, அவரது கவர்ச்சியான தோற்றமும், நடிப்பும் இளைஞர்களை கிறங்கடித்தன.

நீச்சல் உடையில் அப்படி குலுங்க குலுங்க நடந்து வந்தார் என்றால் அப்படியே 'இட்லி குண்டாவில் இருந்து எடுக்கப்பட்ட ஆவி பறக்கும் இட்லி போல’ காட்சியளிக்கும் அவரது அழகு, ரசிகர்களை அடிமையாக்கியது.

‘வில்லாதி வில்லன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘பிஸ்தா’, ‘சிட்டிசன்’ உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆனால், தற்போது 49 வயதாகும் நக்மா, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

90களில் முன்னணி கதாநாயகியாக கலக்கிய நக்மாவுக்கு இருந்த மாபெரும் ரசிகர் பட்டாளத்தை நினைத்து, இந்த முடிவு ரசிகர்களை “இந்த கொடுமையை பார்க்க வேண்டுமா?” என்று மூக்கை சிந்த வைத்துள்ளது.

“காதலன் படத்தில் ‘வெல்வெட்டா வெல்வெட்டா’ பாடலில் கவுண்டமணியுடன் ஆடிய நடனமோ, ‘பாட்ஷா’வில் ரஜினியுடன் இணைந்த நடிப்போ, நக்மாவை ஒரு தலைமுறையின் கனவு கன்னியாக மாற்றியது.

ஆனால், இப்போது அம்மா வேடமா?” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். 90களில் கதாநாயகியாக வலம் வந்த பல நடிகைகள், குணச்சித்திர வேடங்களுக்கு மாறுவது வழக்கமாக இருந்தாலும், நக்மாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நக்மா, சமீபத்தில் தனது திருமண ஆசை குறித்து பேசியபோது, “எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. குடும்பம், குழந்தைகள் என்று வாழ விருப்பமாக இருக்கிறது,” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், 49 வயதாகியும் திருமணமாகாமல், அரசியலிலும், திரைப்படங்களிலும் தனது பயணத்தை தொடர்கிறார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கும் நக்மா, நடிகை ஜோதிகாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஒரு பக்கம் நக்மாவின் இந்த முடிவை விமர்சித்தாலும், மறுபக்கம் அவரது தைரியமான முடிவை ஆதரிக்கவும் செய்கின்றனர். “நக்மாவுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு.

அம்மா வேடமாக இருந்தாலும், அவர் திரையில் பளிச்சிடுவார்,” என்று சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். நக்மாவின் இந்த புதிய கதாபாத்திர முயற்சி, அவரது திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Summary in English : 90s heartthrob Nagma, known for films like Kadhalan and Baashha, has shocked fans by signing on to play Allu Arjun’s mother in a new Telugu film. Unmarried and once linked to Sourav Ganguly, her decision to take on a motherly role has left fans disappointed.