சாலை விபத்தில் சிக்கிய விஜய் தேவாரகொண்டா.. ராஷ்மிகாவுன் திருமணம் நிச்சயமான நிலையில் துயரம்..

ஹைதராபாத், அக்டோபர் 6 :டோலிவுட் சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டா பயணித்த கார், ஆந்திராவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் உண்டவள்ளி அருகே போலரோ வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதிர்ஷ்டவசமாக, நட்சத்திரம் உயிர் தப்பி பாதுகாப்பாக வெளியே வந்துள்ளார். இருப்பினும், அவரது கார் சற்று சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து நிகழ்ந்தது விஜய் தேவரகொண்டா தனது நண்பர்களுடன் புட்டிபர்த்தியில் உள்ள சத்ய சாய் சமாதியைத் தரிசித்த பிறகு, ஹைதராபாத்துக்கு திரும்பி வரும் வழியில்.

போலரோ வாகனத்தின் தாக்குதலால் கார் கடுமையாகத் தாக்கப்பட்டது. உடனடியாக விஜய் மற்றொரு காரில் ஹைதராபாத்துக்கு பயணித்து சென்றதாக அவரது அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்நேரத்தில், விஜய் தேவரகொண்டாவின் திருமண செய்திகளும் பரவலாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகை ரஷ்மிகா மந்தனாவுடன் அவர் ஈஙகேஜ்மெண்ட் நடத்தியதாக சமீபத்தில் வந்த தகவல்கள் உண்மையானவை என்பது தெரிந்ததே.

நிச்சயார்த்தத்திற்குப் பிறகே அவர் சத்ய சாய் சமாதியைத் தரிசிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. விஜய் தேவரகொண்டாவின் ஆரோகியம் குறித்து மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது நலனுக்காக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary : Tollywood star Vijay Deverakonda escaped unharmed from a minor car accident near Undavalli, Jogulamba Gadwal district, when his vehicle collided with a Bolero. The car sustained slight damage; he proceeded to Hyderabad in another vehicle. This follows his recent engagement to Rashmika and a visit to Satya Sai Samadhi in Puttaparthi.