“நீ பண்றது எனக்கு பிடிச்சிருக்கு.. இன்னைக்கு..” கணவரின் நண்பருடன் பரிமளா சேர்ந்து செய்த கொடூரம்.. விசாரணையில் திடுக்..

நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீதர் - பரிமளா தம்பதி, கடந்த பத்து ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் குடித்தனம் நடத்தி வந்தனர். ஸ்ரீதர் பகல் முழுக்க உள்ளூர் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக உழைத்து, இரவு வீடு திரும்புவார்.

பரிமளா வீட்டுக்கு எதிரிலேயே சிறிய இ-சேவை மையம் நடத்தி, குடும்பத்தை கரை சேர்த்தார். வெளியில் பார்த்தால் சாதாரண நடுத்தரக் குடும்பம். ஆனால் உள்ளே... ஒரு கொடூர உறவு பத்து ஆண்டு திருமண வாழ்வை சுக்குநூறாக்கியது. ஸ்ரீதர் வேலை செய்த உணவகத்துக்கு அடிக்கடி உணவு சாப்பிட வந்த பெருந்துறை ஓட்டுநர் கார்த்திகேயனுக்கும் ஸ்ரீதருக்கும் நட்பு ஏற்பட்டது.

“மச்சான்... வா டேபிள் போடு” என்று தோழமை விரைவில் வீட்டுக்குள்ளும் நுழைந்தது. கார்த்திகேயன் அடிக்கடி ஸ்ரீதர் வீட்டுக்கு வந்து போக ஆரம்பித்தான். அங்கிருந்து தான் தொடங்கியது பரிமளா - கார்த்திகேயன் இடையேயான திருமணம் தாண்டிய உறவு.

ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்ட கார்த்திகேயன், அடிக்கடி ஸ்ரீதருக்கு சரக்கு ஸ்பான்சர் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.நம்ம ஆளுங்கசொந்த காசில் குடிக்கும் போது எப்படி குடிப்பார்கள், ஸ்பான்சர் காசில் குடிக்கும் போது எப்படி குடிப்பார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்.

ஸ்ரீதர் மட்டையாகும் அளவுக்கு மது வாங்கி கொடுத்து அவரை போதையில் மூழ்கடித்து அவரது வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு, அவரது மனைவி பரிமளாவை தன்னுடைய போதைக்கு சைட் டிஷ்சாக பயன்படுத்தி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளான் ஸ்ரீதர்.

கணவன் போதையில் அருகில் படுத்திருக்க, நீ பண்றது எனக்கு பிடிச்சிருக்கு.. இன்னைக்கு.. என கணவனின் நண்பனுடன் உச்ச கட்டத்தை எட்டிக்கொண்டிருந்திருக்கிறார் பரிமளா. ஸ்ரீதரின் வீடே அவர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாறிப்போனது.

ஆனால் ஒரு நாள், போதையில் மட்டையான போதும் திடீரென கண் விழித்த ஸ்ரீதர், அருகில் தன்னுடைய மனைவியும் நண்பனும் உல்லாசமாக இருப்பதை பார்த்தான். போதை குப்பென தெளிந்தது, கோபம் தலைக்கேறிய ஸ்ரீதர் இருவரையும் திட்டி, பரிமளாவை அநாகரீகமாகப் பேசி அவரது அம்மா வீட்டுக்கு துரத்தினார். “என் வீட்டுலயே என் மனைவிய நீ...” என்று கத்திய ஸ்ரீதரின் குரல் அந்த இரவு முழுக்க ஒலித்தது.

மறுநாள் காலை... கார்த்திகேயன் கடைக்கு வந்து ஸ்ரீதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். “அண்ணா, போதையில பண்ணிட்டேன் அண்ணா.. ஒரே ஒரு தடவ தான்... மறுபடியும் நடக்காது அண்ணா.. அண்ணி பாவம் அண்ணா.. அவங்க எந்த தப்பும் பண்ணல.. நான் தான் அண்ணா.. என் மேல தான் அண்ணா தப்பு” என்று கண்ணீர் கண்ணீர் வடித்தான்.

நம்பிய ஸ்ரீதர், “சரி டா, இனிமே இப்படி பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்று மனை மன்னித்தார். ஆனால் கார்த்திகேயனின் மனதில் இருந்தது வேறு திட்டம்.

அன்று மாலை, “அண்ணா, இன்னிக்கு நம்ம ரெண்டு பேரும் தனியா போயி குடிக்கலாம், எல்லாத்தையும் மறந்துடலாம்” என்று ஸ்ரீதரை அழைத்துச் சென்றான். தனிமையான இடத்தில் மது ஊற்றி, ஸ்ரீதர் போதையில் தள்ளாடியதும்... கழுத்தை இறுக்கிப் பிடித்து நெரித்துக் கொலை செய்தான் கார்த்திகேயன்! பின்னர் பரிமளாவுக்கு போன் செய்து, “வேலைய முடிச்சிட்டேன்... சாக்கு மூட்டை எடுத்துட்டு வா” என்று குளிர்ச்சியாகச் சொன்னான்.

இருவரும் சேர்ந்து ஸ்ரீதரின் உடலை சாக்கு மூட்டையில் திணித்து, அருகிலிருந்த கால்வாயில் வீசி விட்டு வீடு திரும்பினர். வீடு திரும்பியதும், கணவன் இறந்த துக்கம் கொஞ்சம் கூட இல்லாமல், மீண்டும் கார்த்திகேயனுடன் இன்பக்குதிரை ஏறினால் பரிமளா.

சில நாட்கள் கழித்து சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தந்தனர். சாக்கு மூட்டையைத் திறந்த போலீசார் அதிர்ந்து பார்த்தனர் - உள்ளே ஸ்ரீதரின் சடலம்! விசாரணையில் உண்மை வெளியானது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. பெருந்துறை போலீசார் பரிமளா மற்றும் கார்த்திகேயனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பத்து வருட திருமண வாழ்வு... ஒரு நண்பன் என்ற நம்பிக்கை... எல்லாம் ஒரு கால்வாய் சாக்கு மூட்டையில் முடிந்த கொடூரக் கதை இது. “என் கண்ணு முன்னாடியே...” என்று அழுது புலம்பிய ஸ்ரீதரின் ஆன்மா இன்றும் நீதி கேட்டு அலைந்து திரிவதாகவும், நல்ல குணமான பையன்.. குடிப்பழக்கம் மட்டும் தான்.. யாரையும் தொந்தரவு பண்ண மாட்டானே.. என்று அக்கம் பக்கத்தினர் சொல்கிறார்கள்.

கள்ள உறவு எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்பதற்கு பெருந்துறை காசிப்பிள்ளைப் பகுதியின் இந்த இரத்தக் கறை பதில் சொல்கிறது.

Summary : Sridhar, a parotta master, and his wife Parimala lived in Perundurai. Parimala's affair with driver Karthikeyan led to Sridhar's murder. The duo killed Sridhar, dumped his body in a canal, and were arrested after locals reported a foul-smelling sack.
------Advertisement------
------Advertisement------