ஒரு ஆசிரியர் செய்த கேவலமான செயல்.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்..

கிருஷ்ணகிரி, நவம்பர் 24, 2025 : கல்விக்கூடங்கள் என்றாலே அறிவின் கோயில்கள், ஆசிரியர்கள் என்றாலே குருமார்கள்! ஆனால், இந்த நம்பிக்கையை சிதைத்து, ஒரு அரசுப் பள்ளியை கலவிச் சாலையாக மாற்றிய கொடூர சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

எட்டாம் வகுப்பு படிக்கும் அப்பாவி மாணவி ஒருவரை, மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து, அவளை கர்ப்பமாக்கிய பயங்கரம் - இது வெறும் செய்தி அல்ல, சமூகத்தின் முகத்தில் அறையும் அவலக்குரல்!

பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த அநீதி, அந்த சிறுமியின் வாழ்க்கையை இருளில் தள்ளியது. ஆசிரியர்களான ஆறுமுகம் (37), சின்னசாமி (57), பிரகாஷ் (37) - இவர்கள் மூவரும், பள்ளி வளாகத்திலேயே தங்கள் கொடூர ஆசையை தீர்த்துக் கொண்டனர்.

முதலில் ஒரு ஆசிரியர் தொடங்கிய தகாத தொடுதல், பின்னர் மிரட்டல்களாக மாறியது. "தேர்வில் தோல்வியடையச் செய்வேன், மதிப்பெண்களைக் குறைப்பேன், உன் பெற்றோரிடம் உன்னைப் பற்றி மோசமாகச் சொல்வேன்" என்று பயமுறுத்தி, அந்த அப்பாவி சிறுமியை தங்கள் வலையில் சிக்க வைத்தனர்.

ஆசிரியர்கள் மட்டும் பயன்படுத்தும் கழிவறை - அது தான் இவர்களின் கொடூர அரங்கம்! ஒருவர் உள்ளே சென்றால், மாணவியை அழைத்து, தனது 'நண்பர்களுக்கு' விருந்தாக்கினர்.

ஏழு மாதங்கள்... கற்பனை செய்து பாருங்கள், அந்த சிறுமியின் அவலம்! பள்ளி என்ற புனித இடம், இவர்களால் பாழ்பட்டது. இறுதியில், கடுமையான வயிற்று வலியால் துடித்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர்.

கர்ப்பம்! அதுவும், மூன்று ஆசிரியர்களின் கொடூரத்தால்! பெற்றோர்களின் கண்கள் சிவந்தன, ஆனால் அவர்களின் இதயம் உடைந்தது. மகளின் எதிர்காலம் கெட்டுவிடுமோ என்ற பயத்தில், புகார் கொடுக்க தயங்கினர். அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தும், அவர்கள் ஒதுங்கினர்.

ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்தது - போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி, அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மாணவிக்கு உரிய அனுமதியுடன் கருக்கலைப்பு செய்யப்பட்டது. ஆனால், இது போதுமா? சமூகம் எங்கே தவறியது? ஆசிரியர்கள் என்றால் நம்பிக்கை, ஆனால் இவர்கள் வேலியே பயிரை மேய்ந்த கதை! போதை ஆசாமிகள், ரவுடிகள் செய்யும் கொடுமை ஒருபுறம் இருக்க, கல்விக்கூடங்களுக்குள் இப்படியான அத்துமீறல்கள் நடப்பது கனவிலும் நினைக்க முடியாத கொடூரம்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தைப் போல, இங்கும் விபரங்கள் கசியுமோ என்ற பயம் பெற்றோர்களை பின்னடைவு செய்தது. ஆனால், குற்றவாளிகள் தப்புவதற்கு நாம் ஏன் உடந்தையாகிறோம்? இந்த சம்பவம், நாடு முழுதும் அதிகரித்து வரும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிரான எச்சரிக்கை! பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன - பெயர் கெட்டுவிடும், குடும்பம் அவமானப்படும் என்ற பயத்தில்.

ஆனால், தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்காத வரை, இந்த கொடுமைகள் தொடரும். சமூகமே, விழித்துக் கொள்ளுங்கள்! மாணவியின் அழுகை, நம் அனைவரின் குற்ற உணர்வாக மாறட்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அப்போது தான் நமது கல்வி அமைப்பு மீண்டும் புனிதமாகும்!

Summary in English : In Krishnagiri district, three government school teachers—Aarumugam (37), Chinnasamy (57), and Prakash (37)—sexually assaulted an eighth-grade student for seven months, impregnating her. They used threats of failing grades and the school toilet for the acts, sharing her among themselves. Arrested under POCSO Act and dismissed, while parents hesitated to complain due to stigma fears.