ஒரே ஒரு முறை தான் உடலுறவு.. கர்ப்பமான வயது பெண்.. கைதான பள்ளி மாணவன்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

ஒடிசாவின் புகழ்பெற்ற புவனேஸ்வர் நகரில், “எலீட் டுடோரியல் அகாடமி” என்ற பிரபலமான கோச்சிங் சென்டரில் 18 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் அனுஷா ராய் (38).

மாணவர்களுக்கு கணிதம் கற்பிப்பதில் புகழ்பெற்ற அவர், தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணமே செய்து கொள்ளாத “தனி மரம்” போல இருந்தார். வீட்டில் வயதான தாய் மட்டுமே துணை. அந்தத் தாய்க்கு ஒரே ஆசை – மகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

அந்தக் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தவர் ராஜத் பாண்டா (20). பார்ப்பதற்கு 15 வயது சிறுவன் போல இருப்பான். மெல்லிய உடல், குழந்தை முகம், ஆனால் புத்திசாலி. அவனுக்கு கணிதத்தில் மட்டும் கொஞ்சம் சிரமம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அவனால் தேர்ச்சி பெற முடியவில்லை.

இறுதியாக, இந்த ஆண்டு கண்டிப்பாக நீ பாஸ் பண்ணிடுவ என ஆசிரியை அனுஷா அவருக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தாள்.

அந்த ஒரு மணி நேர வகுப்பு… மெல்ல மெல்ல நட்பாக மாறியது. “மேடம், நீங்க இல்லாம என் வாழ்க்கை இருண்டு போயிடும்” என்று ராஜத் ஒரு நாள் சொன்னான். அந்த வார்த்தை அனுஷாவின் இதயத்தைத் தொட்டது. 38 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த அனுஷாவிற்கு ராஜத்தின் வார்த்தைகள் புதிய உலகத்தை காட்டியது.

நட்பு காதலாக மாறியது. முதலில் காபி ஷாப், பிறகு பார்க், பிறகு… தனிமையை கொண்டாடும் இரவுகள். புவனேஸ்வர், கட்டக், பூரி என ஒடிசாவின் பல தனியார் லாட்ஜுகளில் அவர்கள் இருவரும் தங்கினார்கள். அனுஷா எல்லா செலவையும் ஏற்றுக் கொண்டாள். “நீ என் உலகம்” என்று ராஜத் சொல்ல, அவள் “நான் முழுதாக உனக்கு மட்டும் தான்.. நீ முழுதாக எனக்கு மட்டும் தான்” என்று முணுமுணுத்தாள்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அதிர்ச்சி! அனுஷா கர்ப்பமாகி விட்டாள்.

அவள் தனியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று பிரெக்னென்சி டெஸ்ட் செய்து, “கணவர் ராஜத் பாண்டா” என்று பதிவு செய்தாள். பதிவு எண் 4782/2026. அடுத்த நாள் ஸ்கேன் ரிப்போர்ட் எடுக்கச் சென்றபோது டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

“உங்கள் கணவரை வரச்சொல்லுங்க?” என்று கேட்டபோது அனுஷா ராஜத்தை அழைத்து வந்தாள். அவன் பார்ப்பதற்கு 15 வயது சிறுவன் போல இருந்தான். டாக்டர்களுக்கு சந்தேகம். உடனடியாக போலீஸுக்கு தகவல்.

போலீஸ் ஸ்டேஷனில் முதல் விசாரணை. ராஜத் அழுதபடி சொன்னான்:“நான் ஒரே ஒரு முறைதான் அவருடன் உடலுறவு வைத்தேன். ஆனால் அவர் என்னை மிரட்டுகிறார். 

‘கர்ப்பம் என்னுடையது, திருமணம் செய்யாவிட்டால் உன் பெற்றோருக்குச் சொல்வேன், பள்ளியில் சொல்வேன்’ என்று. அனுஷா மேடம்க்கு வேறு ஆண்களுடன் சில தொடர்புகள் இருந்தன. ஆனால் இந்தக் குழந்தைக்கு நான்தான் காரணம் என்று அவர் பொய் சொல்கிறார்!”

ஆனால் அடுத்த 48 மணி நேரத்தில் போலீஸுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

1. முதல் திருப்பம்: லாட்ஜ் ரெக்கார்டுகள். கடந்த ஆறு மாதத்தில் 14 முறை வெவ்வேறு லாட்ஜுகளில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அறை பதிவு அனுஷாவின் பெயரில்தான். அவர்கள் இருவரும் “மனைவி-கணவர்” என்று சொல்லி இருக்கிறார்கள்.

2. இரண்டாவது திருப்பம்: அனுஷாவின் போனில் இருந்து கைப்பற்றப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ்அப் சாட்கள். “ராஜத், நீ என்னைத் தொட்ட அந்த முதல் நாளிலிருந்தே எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் வேண்டாம்” என்று அவள் எழுதியிருந்தாள். ராஜத் பதில்: “அனுஷா… என் மனைவியே… நான் உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன்" என்று முதலில் சொன்னவனே நான்தான்!” கடவுள் என்னை அனுப்பியதே உனக்காகத்தான் செல்லமே" என சாட்கள். ஆனால், அனுஷா வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

3. மூன்றாவது திருப்பம் (அதிர்ச்சி!): அனுஷாவின் வயதான தாய், 68 வயது சுனிதா ராய், போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்தார்: “நான் தான் என் மகளை இந்த உறவைத் தொடரச் சொன்னேன். ராஜத் தான் முதலில் என் மகளிடம் காதலை சொன்னது. ‘வயது வித்தியாசம் ஒரு பிரச்சனையில்லை, உண்மையான காதல் என்றால் உன் விருப்பம்’ என்று நான் தான் சொன்னேன். ராஜத் பல நாட்கள் என் வீட்டுக்கு இரவில் வந்து தங்கி போயிருக்கிறான். நான் பார்த்திருக்கிறேன்.”

4. நான்காவது திருப்பம்: ராஜத்தின் பெற்றோர் (பிரபல பிசினஸ்மேன்) முதலில் அனுஷா மீது POCSO வழக்குப் பதிவு செய்யக் கோரினார்கள். ஆனால் ராஜத் போலீஸ் முன் நின்று கதறினான்: “நான் அனுஷா மேடம்-ஐ காதலிக்கிறேன். குழந்தையை வளர்க்க விரும்புகிறேன். என் பெற்றோர் என்னை வேறு பெண்ணுக்கு திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தார்கள். அதனால்தான் முதலில் பொய் சொன்னேன்!”

5. ஐந்தாவது திருப்பம் (கிளைமாக்ஸ்): மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி – அனுஷா இரட்டைக் குழந்தைகளை சுமக்கிறாள்! டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. ஆனால் அனுஷா உறுதியாகச் சொன்னாள்: “நான் கர்ப்பத்தை கலைக்க மாட்டேன். இந்தக் குழந்தைகள் ராஜத்தின் அடையாளம். இரண்டு மாதத்தில் அவன் 21 வயது ஆகிவிடுவான். சட்டப்படி எந்தத் தடையும் இல்லை. நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்.”

இப்போது ஒடிசா முழுக்க பரபரப்பு! சமூக வலைதளங்கள் இரண்டாகப் பிரிந்துள்ளன. ஒரு பக்கம் “ஆசிரியை-மாணவன் காதல் – வயது வித்தியாசம் பிரச்சனையில்லை” என்று ட்ரெண்ட். மறுபக்கம் “க்ரூமிங், துஷ்பிரயோகம்” என்று கோபம்.

ராஜத்தின் பெற்றோர் இன்னும் வழக்கை வாபஸ் பெறவில்லை. அனுஷா தன் கையில் இருக்கும் எல்லா ஆதாரங்களையும் (சாட்கள், ஹோட்டல் பில், தாயின் வாக்குமூலம்) வைத்திருக்கிறாள். ராஜத் இப்போது தைரியமாகச் சொல்கிறான்: “என் குழந்தைகளின் தந்தை நான். அவர்களை வளர்க்கப் போகிறேன். அனுஷா என் மனைவி.”

இரண்டு மாதங்களில்… ஒடிசாவில் ஒரு புதிய காதல் கதை தொடங்கப் போகிறதா? அல்லது சட்டத்தின் கைகள் வேறு திருப்பம் கொடுக்குமா?

விசாரணை தொடர்கிறது… ஆனால், இதயங்கள் ஏற்கனவே ஒன்றாகிவிட்டன!

ஒருவேளை, ராஜத் அவனது பெற்றோரின் பேச்சை கேட்டு இந்த குழந்தைக்கு தந்தை நான் இல்லை என்று அடம் பிடித்திருந்தால் இந்த வழக்கின் திசையும்,ஆசிரியை அனுஷாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியிருக்கும்.

(குறிப்பு : இது உண்மை சம்பவங்களை கொண்டு எழுதப்பதட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன.) 

Summary in English : A 38-year-old female tutor developed a close bond with her 20-year-old male student in Odisha. Their friendship grew into a relationship. She later became pregnant and registered at a government hospital naming him as the father. Police investigated after doctors raised doubts about his age. The student initially claimed pressure but later expressed willingness to marry her after turning 21. Both families are involved and the matter is under inquiry.