கொல்கத்தா : ஒரு பள்ளி ஆசிரியை தனது மாணவருடன் தகாத தொடர்பில் ஈடுபட்டு, இருவரும் திடீரென வீட்டை விட்டு வெளியேறி 6 மாதங்கள் காணாமல் போன சம்பவம் கொல்கத்தா முழுவதையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்தினர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இறுதியில் ஆறு மாதங்கள் கழித்து இருவரும் திரும்பி வந்தனர். அப்போது ஆசிரியை ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் வெளியான தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
திருமதி. பியாலி மித்ரா (ஆசிரியை) தனது பள்ளியில் படிக்கும் 19 வயது மாணவர் அர்னாப் பட்டாச்சார்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல். ஒரு கட்டத்தில் இருவரும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறினர். காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினர் முழு வீரியத்துடன் தேடினர். ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும் எந்த தகவலும் இல்லை.
இறுதியில் இருவரும் திரும்பி வந்தபோது, பியாலி ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். காவல்துறையினர் விசாரணை செய்தபோது, கர்ப்பத்திற்கு காரணம் அர்னாப் தான் என்று பியாலி குற்றம் சாட்டினார்.
ஆனால் அர்னாப் பட்டாச்சார்யா கூறிய தகவல்கள் காவல்துறையினரை திகைக்க வைத்தன.
அர்னாப் கூறியதாவது:
“என்னை விட வயதில் மூத்த பலருடன் திருமதி. பியாலிக்கு தகாத தொடர்பு இருந்தது. எனது டியூஷன் நண்பர்களுடனும் அவர் தகாத தொடர்பில் இருந்தார். அவர்களின் அனுமதியின்றி தவறான இடங்களில் தொட்டு மோசமாக நடந்து கொண்டார்.
ஒரு நாள் ‘கடைக்கு செல்வோம்’ என்று என்னை அழைத்துச் சென்றார். ஆனால் அழைத்துச் சென்ற இடம் எங்கே என்றே தெரியவில்லை. நான் தப்பிக்க நினைத்தேன். ஆனால் அந்த இடத்தின் ஊர் பெயர் கூட தெரியாது. பணமும் இல்லை, தொலைபேசியும் இல்லை. தப்பித்தால் இன்னும் பெரிய பிரச்சனை ஏற்படும் என்று பயந்தேன்.
‘நாளை அனுப்பி விடுகிறேன்’, ‘அடுத்த வாரம்’ என்று சொல்லி சொல்லி ஐந்து மாதங்கள் என்னை அவருடன் வைத்திருந்தார். நான் என் அம்மா அப்பாவை பார்த்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தினேன். அதன் பிறகுதான் என்னை அழைத்து வந்தார்.
முக்கியமாக, நானும் ஆசிரியையும் ஒரு நாள் கூட தகாத உறவு கொண்டதில்லை. ஆனால் இந்த கர்ப்பத்திற்கு நான் காரணம் என்று அவர் கூறுகிறார்.”
அர்னாப், பியாலிக்கு வயதில் மூத்த சில நபர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அவர்களின் பெயர்களை காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஆசிரியை பியாலி வீட்டில் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வெளியான அதிர்ச்சித் தகவல்: இந்த கர்ப்பத்திற்கு உண்மையான காரணம், ஆசிரியையின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசிக்கும், ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 47 வயது திரு. பிகாஷ் பானர்ஜி தான்!
தற்போது காவல்துறையினர் முழு வீரியத்துடன் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்த மர்மமான சம்பவம் கொல்கத்தா நகரையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary : In Kolkata, a school teacher and her 19-year-old student went missing for six months. Upon returning, the teacher was five months pregnant and identified the student as responsible. His statements revealed other connections. Investigation pointed to a 47-year-old neighbor as the actual cause. Police continue their probe. The case has shocked the city.