Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

மனோரமா to அமலாபால் பேராசையால் படம் எடுத்து போண்டியான நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..!

விரலுக்கு ஏற்ற வீக்கம், ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்ற பழமொழிகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எனினும் ஆசை யாரை விட்டுச் செல்லும். அதிகளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையால் மனோரமா ஆச்சி முதல் அமலா பால் வரை திரைப்படங்களை தயாரித்து போண்டியான விஷயத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை அமலாபால் கடாவர் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். மேலும் இந்த படத்தில் இவர் தடயவியல் நிபுணராக நடித்தார். இந்தப் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட்டார். இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் பெரிய வெற்றியை தராமல் பிளாப்பானது. இதனை அடுத்து இவரது மார்க்கெட் குறைந்ததோடு மட்டுமல்லாமல் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போனது.

அதுபோலவே 90-கால கட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த தொடை அழகி ரம்பா அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் 2003 ஆம் ஆண்டு சக்தி பரமேஷ் இயக்கத்தில் ரம்பா, ஜோதிகா, லைலா மூன்று ஜோடிகள் இணைந்து நடித்த த்ரீ ரோசஸ் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதன் மூலம் ஏராளமான கடனைப் பெற்று அதை திருப்ப செலுத்த முடியாத நிலைமைக்கு சென்று விட்டார்.

நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகளாகிய ராதிகா சின்னத்திரையிலும், வெள்ளி திரையிலும் கொடிகட்டி பறந்த நடிகை. இவர் நடிகையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்து வழங்கி இருக்கிறார். இவரின் ரேடான் மீடியா தயாரித்த மீண்டும் ஒரு காதல் கதை, அதன் தொடர்ச்சியாக ஜித்தன், மாரி போன்ற படங்கள் இவருக்கு அதிகளவு வசூலை தராத படங்களாக மாறிவிட்டது. குறிப்பாக ஜித்தன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

நடிகையர் திலகம் சாவித்திரியும் திரைப்படங்களில் தயாரிப்பதில் இறங்கி சம்பாதித்த பணம் முழுமையும் இழந்தார். குறிப்பாக இவர் சொந்த தயாரிப்பில் வெளி வந்த பிராப்தம் என்ற திரைப்படத்தின் மூலம் கடனாளியாக மாறிவிட்டார். மேலும் இந்த படத்தை எடுத்ததினால் அவர் வீடு, வாசல் எல்லாம் விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

--Advertisement--

திரை உலகில் என்றுமே அசைக்க முடியாத இடத்தை தனக்காக பிடித்திருந்த நடிகை மனோரமா தனது மகனின் வற்புறுத்தல் காரணமாக தயாரிப்பாளராக மாறினார். அந்த வகையில் இவர் தூரத்து சொந்தம் என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த பணத்தை எல்லாம் பையன் சொல்கிறான் என்று நம்பி கண்மூடித்தனமாக செலவு செய்து மொத்த பணத்தையும் இழந்த கதை எல்லோருக்கும் தெரியும்.

இப்படி நடிப்பில் உச்சத்தை தொட்ட நடிகைகள் பலரும் சொந்த தயாரிப்பில் இறங்கி தனது சொத்துக்களை இழந்தது பற்றி தற்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். எனவே உங்களின் தகுதி அறிந்து ஆசைப்படுவதும், தகுதியை அறிந்து செயல்படுவதும் சிறப்பாக இருக்கும்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top