Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்த பிரபல நடிகர் !

நான்தான் வழக்கு கொடு என்ற மலையாள திரைப்படத்தில் வழக்குரைஞராக நடித்து கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் சுக்கூர் . இவரது மனைவி ஷீனா மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக பணிபுரிந்தார்.

இந்த நிலையில் தான் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் வைத்து சுக்கூர் தனது மனைவியை நேற்று சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் மீண்டும் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமண நிகழ்ச்சியில் இவர்களது 3 மகள்களும் சாட்சிகளாக கலந்து கொண்டார்கள். இவர்கள் முஸ்லிம் தம்பதியாக இருப்பதால் கேரளாவில் உள்ள சன்னி பிரிவு உயர்கல்வி மையம் தற்பொழுது கண்டனம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் தனிநபர் சட்டங்கள் மற்றும் இஸ்லாம் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டாவது திருமணம் என்பது ஒரு நாடகம் என்றும் தனது சொத்தில் ஒரு பகுதியை மரணத்திற்குப் பிறகு சகோதரர்களுக்கு  போய்விடக்கூடாது என்ற மனப்பான்மையுடன் இவர் இவ்வாறு செயல்பட்டு உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் முஸ்லிம் சட்டங்களின்படி ஆண் வாரிசு இல்லாத நபர் தனது சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே அவரது மகளுக்கு கிடைக்கும்.

மீதம் உள்ள சொத்துக்கள் சகோதரர்களுக்கு சென்றுவிடும் இதனால்தான் இந்த அமைப்பு இவரது இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனது முடிவு எந்த மத நம்பிக்கையையும் அமைப்பு செய்வதற்கான நோக்கம் இல்லை எனவும். இந்த வலுவான எதிர்ப்பிற்கு எந்த அவசியமும் இல்லை எனவும் தனது பேஸ்புக் அக்கவுண்டில் தெரிவித்துள்ளார்

--Advertisement--

இந்த தம்பதிகளின் இந்த முடிவுக்கு சமூக ஊடகத்தில் பெருத்த ஆதரவு கிடைத்து வருகிறது. பிரபல திரைப்பட ஒளி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி வெளியிட்ட பதிவில் நாட்டிலிருக்கும் எந்த ஒரு மனிதருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த விஷயம் அமைந்துள்ளது.

அவரது இரண்டாவது திருமணத்தின் போது என்னால் கூட இருக்க முடியவில்லை. ஆனால் அவர் தைரியத்துடன் எடுத்த இந்த முடிவுக்காக நான் துணையாக நிற்கிறேன். உங்களுக்கும் புதிதாக திருமணம் செய்து கொண்ட உங்களது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தனது மனைவியை திருமணம் செய்த சுக்கூர் மகள்களின் எதிர்காலம் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு 29 ஆண்டுகளுக்குப் பின்னர் மனைவியை மீண்டும் 2வது திருமணம் செய்துள்ளார்

Continue Reading
 

More in

Trending Now

To Top