Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Gossips Corner

அந்த ஆசையால் காதல் கணவருக்கு கம்பி நீட்டி விட்டு.. லைட் நடிகருடன் சென்ற பிரபல நடிகை..!! அட கன்றாவிய..!

ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அந்த பழமொழியையே பங்கம் செய்யக்கூடிய வகையில் தான் ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை விவாகரத்து செய்துவிட்டு சினிமாவில் நடித்தால் போதும் என்ற முடிவை பிரபல நடிகை ஒருவர் எடுத்து இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக 90-களில் வலம் வந்த இந்த நடிகை இன்றும் இளமை மாற எவர்கிரீன் நடிகையாகவே காணப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்த, இவர் பார்ப்பதற்கு செமதியாக இருந்த காரணத்தால் அந்த நடிகருடன் சேர்த்து நடித்ததின் மூலம் நல்ல பெயர் கிடைத்தது.

தமிழ் திரைப்படங்களில் அடுத்தடுத்து வெற்றியைப் பெற்ற இவர் தமிழில் சிறிது மார்க்கெட் குறைந்த காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி பக்கம் சென்று விட்டார். இதனை அடுத்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அந்த அழகு நடிகை அங்கு இவர் நடித்த படங்கள் வரவேற்பு கிடைக்காத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

பாலிவுட்டில் நடித்த படங்கள் இவருக்கு வெற்றியைத் தர, அங்கேயே தங்கி பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்று விட்டார். மேலும் படங்களில் நடித்து, நடித்து போரடித்து போக அந்த நடிகை உருகி, உருகி ஜிம் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

--Advertisement--

திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த அந்த நடிகை தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயான நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டுள்ளது. தனது ஆசையை கணவனிடம் சொல்ல முதலில் நோ சொன்ன கணவர், நடிகையின் பிடிவாதத்தால் ஓகே சொல்லிவிட்டார்.

இந்நிலையில் தனக்கு நடிக்க வாய்ப்பு தந்த தமிழ் திரை உலக பக்கம் வந்து மீண்டும் திரை வாய்ப்பை தேட ஆரம்பித்தார். அதை அடுத்து சர்ச்சை நடிகரின் படத்தில் நடிக்க கமிட் ஆகி நடித்தார். பெரிய பட்ஜெட்டில் உருவாகிய அந்த படம் பல பிரச்சனைகளில் சிக்கி ஒரு வழியாக பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இதனை அடுத்து தனது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்த அந்த நடிகை மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற அதிக ஆசை இருப்பதால் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யக்கூடிய மனநிலைக்கு வந்துவிட்டார். இதை அடுத்து மகளோடு தற்போது தனித்து வாழ்கிறார்.

இதனால் வரை திரையுலகில் சம்பாதித்து வைத்திருந்த நல்ல பேரை இந்த சினிமா ஆசையால் நாசம் செய்து கொண்ட நடிகை பற்றி சினிமா வட்டாரத்தில் அரசல், புரசலாக பேச்சுக்கள் புகைய ஆரம்பித்து விட்டது.

அதுமட்டுமல்லாமல் சர்ச்சை நடிகரின் படத்தில் நடிக்கும் நடிகைகளின் நிலைமை கடைசியில் இப்படித்தான் ஆகும். ஏனென்றால் அவர் என் ராசி அப்படி என்று சூசகமாக காதும் காதும் வைத்தது போல பேசி வருகிறார்கள்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Gossips Corner

Trending Now

To Top