Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இதை செய்வது என்ன தப்பு..? நடிகை புவனேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?

சினிமா துறையை பொறுத்தவரை. நடிகைகள் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் சினிமா வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.

பொதுவாக நடிகைகளுக்கு படப்பிடிப்பில் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களால் ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை:

சில பேர் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் சினிமாவில் வாய்ப்பு நிலைத்து இருக்க முடியும் என்ற காரணத்தினால் தெரிந்தே அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகளை அனுபவித்து தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று முன்னணி நடிகைகளாக இருந்து வரும் பல நடிகைகள் ஒரு காலத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் இந்த மார்க்கெட்டை பிடித்து இருக்கிறார்கள் என கோலிவுட்டில் வெளிப்படையாகவே பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

அந்த வகையில் மாடல் அழகியாக இருந்து தொலைக்காட்சிகளில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு சினிமா வாய்ப்பை பெற்றவர் தான் நடிகை புவனேஸ்வரி.

பூனை கண்ணு புவனேஸ்வரி:

இவரை புவனேஸ்வரி என்று சொல்வதை விட பூனைக்கண்ணு புவனேஸ்வரி என்று சொன்னால் எல்லோருக்கும் டக்குனு ஞாபகத்திற்கு வந்து விடுவார்.

குறிப்பாக தொலைக்காட்சி தொடர்களில் பல நாடகங்களில் வில்லியாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றார் நடிகை புவனேஸ்வரி.

திரைப்படம் என எடுத்துக்கொண்டால் கடந்த 2003 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் இவர் ராணி என்ற விபச்சாரியாக நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் தெலுங்கு ஹிந்தி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக தமிழ் நடிகை புவனேஸ்வரி மற்றும் நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

விபச்சார தொழில்:

அவர்கள் சென்னை அடையாறில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து இந்த மோசடியை நடத்தியதாக செய்திகள் வெளியாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இதை அடுத்து புவனேஸ்வரியின் மீதான மக்களின் பார்வை தவறாக விழுந்ததால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

இவர் தமிழில் வெளிவந்த கந்தா கடம்பா கதிர்வேலா ,பிரியமானவளே, ரிஷி, பாய்ஸ், என்னவோ பிடிச்சிருக்கு, தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடிநடித்து த்த புகழ் பெற்றிருக்கிறார்.

இதனிடையே பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். பாசமலர், சந்திரலேகா, ஒரு கை ஓசை , சித்தி உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இல்லத்தரசிகளின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே பேட்டி ஒன்றில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட்ட அந்த சமயத்தில் யாரேனும் என்னை அழைத்து பேட்டி எடுங்கள் சார் என்று நானே வாண்டடாக சென்று கேட்டேன்.

ஏனென்றால் அந்த சமயத்தில் எடுக்கப்படும் பேட்டி சர்ச்சைக்குள்ளாகி அதன் மூலம் எனக்கு சினிமா சான்ஸ் வரணும் அப்படிங்கறதுக்காக தான் சொல்றேன் என அவர் கூறியுள்ளார்.

படுக்கை பகிர்ந்தால் என்ன தவறு?

பின்னர் அது மட்டும் இல்லாமல் புவனேஸ்வரி அட்ஜஸ்ட்மென்ட் செய்தால், படவாய்ப்பிற்காக படுக்கையை பகிர்வதில் என்ன தப்பு இருக்கு? என நேரடியாக கேள்வியும் கேட்டிருக்கிறார்.

அதையே தலைப்பாக வைத்து அந்த பேட்டியும் வெளியிட்டுள்ளார். அந்த பேட்டிக்கு பிறகு அவரை பலரும் தேடி சென்று வாய்ப்பு கொடுத்தார்கள்.

அதன் பின்னர் அவருக்கு கிடைத்த சீரியல்கள் வாய்ப்புகள் தான் சித்தி, சொர்க்கம், ராஜராஜேஸ்வரி தெற்கத்தி பொண்ணு, சந்திரலேகா, ஒரு கை ஓசை, பாசமலர் ஆகிய சீரியல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top